பதிவு செய்த நாள்
28 டிச2018
23:53
‘ஆர்ஜியோ’ நிறுவனம், புதிய மற்றும் பழைய வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டு பரிசாக, 399 ரூபாய், ‘ரீசார்ஜ்’ செய்தால், ‘ஏஜியோ’ கூப்பன் மூலம், முழு தொகையை திரும்பப் பெறும் திட்டத்தை அறிவித்துள்ளது.
இந்தாண்டு ஏப்ரல் – அக்டோபர் வரை, 38 ஆயிரத்து, 896 கோடி ரூபாய் மதிப்பிற்கு, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, மத்திய நிதி துறை இணை அமைச்சர், ஷிவ் பிரதாப் சுக்லா, லோக்சபாவில் தெரிவித்துள்ளார்.
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, அதன் ஊழியர்களுக்கு பங்குகளை ஒதுக்கி, 200 கோடி ரூபாய் திரட்டும் திட்டத்திற்கு, அவ்வங்கியின் இயக்குனர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
‘மல்டிபிளக்ஸ்’ திரையரங்குகளை நிர்வகித்து வரும், பி.வி.ஆர்., நிறுவனம், தகுதியுள்ள நிதி நிறுவனங்களுக்கு பங்கு அல்லது கடன் பத்திரங்கள் மூலம், 750 கோடி ரூபாய் திரட்ட, பங்கு முதலீட்டாளர்களின் ஒப்புதலை கோரியுள்ளது.
உருக்கு இறக்குமதி வரி குறைப்பு தொடர்பாக, அமெரிக்கா உடனான பேச்சு தோல்வி அடைந்ததால், அந்நாட்டில் இருந்து இறக்குமதியாகும் குறிப்பிட்ட பொருட்களுக்கு வரியை உயர்த்த, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|