பதிவு செய்த நாள்
30 டிச2018
00:33
புதுடில்லி: ‘வலைதள சந்தை நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் காரணமாக, இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடு குறையும்’ என, அமெரிக்க வர்த்தக கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.மத்திய அரசு, வலைதள சந்தை நிறுவனங்கள் வழங்கும் சலுகைகளுக்கு கடிவாளம் போடும் வகையில், மின்னணு வர்த்தகத்தில், அன்னிய நேரடி முதலீட்டு விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது. இது, 2019 பிப்., 1 முதல் அமலுக்கு வர உள்ளது.இதனால், ‘அமேசான், பிளிப்கார்ட்’ உள்ளிட்ட வலைதள சந்தை நிறுவனங்கள், விற்பனை பொருட்களுக்கு, தள்ளுபடி சலுகைகளை தாராளமாக வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இது குறித்து, அமெரிக்க வர்த்தக கூட்டமைப்பைச் சேர்ந்த, அமெரிக்கா – இந்தியா வர்த்தக கூட்டமைப்பு தலைவர், நிஷா தேசாய் பிஸ்வால் கூறியதாவது:மத்திய அரசு, சமீபத்தில் அறிவித்த புதிய விதிமுறைகள், நுகர்வோரை பாதிக்கும். இந்தியாவில், அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்ய தயங்கும்.‘வால்மார்ட்’ போன்ற நிறுவனங்கள், இந்தியாவில் பெருந்தொகையை முதலீடு செய்து உள்ளன; தொடர்ந்து முதலீடு மேற்கொள்ளவும் உள்ளன.இந்த நிலையில், அரசின் நடவடிக்கை, அன்னிய நேரடி முதலீடுகளை கட்டுப்படுத்தவே உதவும். அதன் தாக்கம் குறித்து, இன்னும் முழுமையாக ஆராய்ந்து வருகிறோம்.மத்திய அரசு, அனைத்து தரப்பினரிடம் கலந்தாலோசிக்காமல், இந்த முடிவை எடுத்துள்ளது.எனவே, புதிய விதிமுறைகளை அமல்படுத்துவதை தள்ளி வைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.எப்படி முதலீடு குவியும்?இந்தியாவில் முதலீடு செய்ய, அமெரிக்க நிறுவனங்கள் தயாராகி வருகின்றன. சீனாவில் உள்ள ஒரு அமெரிக்க நிறுவனத்திடம், இந்தியாவில் தொழில் துவங்குவது குறித்து பேசி வருகிறோம். இத்தகைய சூழலில், ஒரே நாளில், கொள்கையை மாற்றினால், எவ்வாறு அன்னிய முதலீடுகளை ஈர்க்க முடியும். இந்தியாவில், வெளிப்படையான, ஸ்திரமான நிலைப்பாடு இல்லையென்றால், எந்த அன்னிய நிறுவனம், முதலீடு செய்ய முன்வரும்? முகேஷ் அகி தலைவர், அமெரிக்கா – இந்திய நிலைப்பாடு மற்றும் கூட்டுறவு அமைப்பு
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|