பதிவு செய்த நாள்
01 ஜன2019
23:50
புதுடில்லி:சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும், செயற்கை ரப்பர் மீது, பொருள் குவிப்பு தடுப்பு வரி விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவுக்கு
தேவையான செயற்கை ரப்பர் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு
வருகிறது. வாகனம் மற்றும் இதர தொழிற்சாலை பயன்பாட்டுக்கு இந்த
ரப்பர் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.இத்தகைய செயற்கை ரப்பர் மீது, 18 மாத கால அளவுக்கு, பொருள் குவிப்பு தடுப்பு வரி விதிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருகின்றன.
ஒரு கிலோவுக்கு 5.45 ரூபாயிலிருந்து 509.32 ரூபாய் வரை கூடுதலாக வரி விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதுகுறித்து, வணிக தீர்வுகளுக்கான இயக்குனரகம் தெரிவித்து உள்ளதாவது:இத்தகைய
வரிவிதிப்பு, அதிக அளவிலான இறக்குமதியை குறைப்பதற்கு மிகவும்
பயன்படும். எனவே, இந்த வரிவிதிப்பு, 18 மாதங்கள் என்ற அளவுக்கு
இருக்கும். இருப்பினும், இதுகுறித்து நிதியமைச்சகம்தான் இறுதி
முடிவு எடுக்க வேண்டும்.
செயற்கை ரப்பர் மட்டுமின்றி, வேறு பல
பொருட்களும் குறைவான விலையில் அதிகமாக இறக்குமதி
செய்யப்படுவதாக புகார்கள் வருகின்றன. அது குறித்தும் விசாரித்து
உரிய
நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
வர்த்தக பற்றாக்குறையை சரி செய்யும் வகையில், ஏற்கனவே சீனாவிலிருந்து குறைந்த விலையில் இறக்குமதியாகும் பல்வேறு பொருட்கள் மீது, இந்தியா, பொருள் குவிப்பு தடுப்பு வரியை விதித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|