பதிவு செய்த நாள்
13 ஜன2019
23:40
வைப்பு நிதி, சில்லரை முதலீட்டாளர்கள் பரவலாக நாடப்படும் முதலீடாக இருக்கிறது. வைப்பு நிதி முதலீட்டில் முதலில் கவனிக்கப்படுவது வட்டி வருமானம் தான்.அண்மை காலங்களில், ‘ஸ்மால் பைனான்ஸ்’ வங்கிகள், வைப்பு நிதிகளுக்கு அதிக வட்டி விகிதம் அளித்து வருகின்றன.
வழக்கமான வங்கிகளை விட, ஸ்மால் பைனான்ஸ் வங்கிகள் வைப்பு நிதிகளுக்கு அளிக்கும் வட்டி விகிதம் அதிகமாக இருப்பதால், இவை ஈர்ப்பு மிக்கதாகவும் இருக்கின்றன.ஸ்மால் பைனான்ஸ் வங்கிகள், ரிசர்வ் வங்கியால் அனுமதிக்கப்பட்ட புதிய வகை வங்கிகள். இந்த வங்கிகளும் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டின் கீழ் தான் வருகின்றன.
வங்கிச்சேவை பெறாத பிரிவினரை இலக்காக கொண்டு இவை செயல்படுகின்றன. வழக்கமான வங்கிகளில் பெறும் சேவைகளை இவற்றிலும் பெறலாம்.இந்த வங்கிகளில் வைப்பு நிதி முதலீடும் செய்யலாம். புதிய வங்கிகள் என்பதால் இவை வைப்பு நிதி திரட்டுவதில் அதிக கவனம் செலுத்தி, அதற்காக அதிக வட்டியும் அளித்து வருகின்றன. எனினும், இவற்றில் முதலீடு செய்ய தீர்மானிக்கும் போது, வட்டி விகிதம் தவிர மற்ற அம்சங்களையும் பரிசீலிக்க வேண்டும்.
ஸ்மால் பைனான்ஸ் வங்கி வைப்பு நிதிக்கும், ௧ லட்சம் ரூபாய் வரை காப்பீடு பாதுகாப்பு உண்டு. இதற்கான ரிசர்வ் வங்கி துணை அமைப்பு இணைய தளத்தில், ஏழு ஸ்மால் பைனான்ஸ் வங்கிகள் இடம்பெற்றுள்ளன.பாதுகாப்பு குறித்த கவலை இல்லை என்றாலும், ஸ்மால் பைனான்ஸ் வங்கிகளில் செய்யப்படும் வைப்பு நிதி முதலீடு சிறியதாக இருப்பது நல்லது என்கின்றனர். சேமிப்பின் ஒரு பகுதியை இவற்றில் முதலீடு செய்வது ஏற்றதாக இருக்கும். வைப்பு நிதி முதலீடு பரவலாக அமையவும் இது உதவும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|