பதிவு செய்த நாள்
24 ஜன2019
11:04
மும்பை : கடந்த 2 நாட்களாக சரிவுடன் காணப்பட்ட இந்திய பங்குச்சந்தைகள், இன்று (ஜன.,24) ஏற்றத்துடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன. ஆசிய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் காணப்படுவதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளும் உயர்வுடன் காணப்படுகின்றன.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9.15 மணி நிலவரம்) சென்செக்ஸ் 28.27 புள்ளிகள் உயர்ந்து 36,136.74 புள்ளிகளாகவும், நிப்டி 3.65 புள்ளிகள் உயர்ந்து 10,835.15 புள்ளிகளாகவும் உள்ளன. நீண்ட நாட்களுக்கு பிறகு நிப்டி உயர்வுடன் காணப்படுவது முதலீட்டாளர்கள் இடையே நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
ஐடிசி, என்டிபிசி, எச்சிஎல் டெக், ஏசியன் பெயிண்ட், ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் பைனான்ஸ், பார்தி ஏர்டெல், டிசிஎஸ், மாருதி சுசுகி, ஓஎன்ஜிசி, எஸ்பிஐ உள்ளிட்ட நிறுவன பங்குகள் 1.64 சதவீதம் உயர்வுடன் காணப்படுகின்றன. அதே சமயம் டாடா மோட்டார்ஸ், இன்போசிஸ், டாடா ஸ்டீல், கோல் இந்தியா உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.
ஆசிய பங்குச்சந்தைகளை பொறுத்தவரை, ஹாங்காங் பங்குச்சந்தைகள் 0.22 சதவீதமும், ஷங்காய் பங்குச்சந்தைகள் 0.61 சதவீதமும், தைவான் பங்குச்சந்தைகள் 0.16 சதவீதமும், சிங்கப்பூர் பங்குச்சந்தைகள் 0.35 சதவீதமும், கொரிய பங்குச்சந்தைகள் 0.42 சதவீதமும் உயர்வுடன் காணப்படுகின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|