பதிவு செய்த நாள்
25 ஜன2019
23:23
புதுடில்லி : முகேஷ் அம்பானி, இந்தியாவின் முதல், ‘இன்டர்நெட்’ ஜாம்பவானாக முயற்சி செய்கிறார் என, ‘எகனாமிஸ்ட்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.
இது குறித்து, அப்பத்திரிகையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:‘ஜியோ’ சேவை அறிமுகம் செய்யப்பட்டு, தற்போது, 28 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஜியோ மூலமாக, முகேஷ் அம்பானி தொலை தொடர்பு துறையில் மேம்பாடுகளை செய்து, தன் நாட்டை மாற்றி உள்ளார். இப்போது அடுத்தகட்டமாக, ‘ஜெப் பிஜோஸ்’ அல்லது, ‘ஜாக் மா’ போல இந்தியாவில் உருவெடுக்க முயற்சிக்கிறார்.‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனம் மூலம், கருத்தாக்கங்கள் சம்பந்தமாக முதலீடு செய்துள்ளார்.
கிரிக்கெட் போட்டிகள், டிஸ்னி படங்கள் ஆகியவற்றை வினியோகிக்கும் உரிமையையும் வாங்கி உள்ளார்.இவற்றை தன், ‘ஜியோ டிவி’ மூலமாக வெளியிடுகிறார்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில், மொபைல் போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 2018 நவம்பர் கணக்குப்படி, 117 கோடி ஆக உயர்ந்துள்ளது. ‘பிராட்பேண்டு’ உபயோகிப்பாளர்கள் எண்ணிக்கை, 50 கோடியாக அதிகரித்துள்ளது. இதில், 97 சதவீதம் பேர், ‘ஒயர்லெஸ்’ இணைப்பை பெற்றுள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|