பதிவு செய்த நாள்
12 பிப்2019
01:44
சேலம்:தமிழகத்தில் கோடை காலம் துவங்குவதை குறிக்கும் வகையில், வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கி உள்ளதால், ‘அம்மா’ மினரல் வாட்டர் பாட்டில்களின் விற்பனை சூடு பிடித்துள்ளது.
விரைவு போக்குவரத்துக் கழக கட்டுப்பாட்டில், கும்மிடிப்பூண்டியில் உள்ள, சாலை போக்குவரத்து நிறுவனத்தின் சார்பில், தினமும், 3 லட்சம் பாட்டில்கள் உற்பத்தி செய்யப்பட்டு, சென்னையில் இருந்து, பிற பகுதிகளுக்கு வினியோகிக்கப்படுகிறது.
கடந்த ஜனவரி வரை, காலை, 8:00 மணி வரை, பனிப்பொழிவின் தாக்கம் இருந்ததால், அம்மா மினரல் வாட்டர் பாட்டில்களின் விற்பனை மந்த நிலையில் இருந்தது. கடந்த மாதம் வரை, தினசரி, 1.10 லட்சம் பாட்டில்கள் விற்பனையாகின.
பிப்ரவரியில், காலை, இரவு நேரங்களில் பனிப்பொழிவின் தாக்கம் குறைந்ததோடு, வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் சூடு பிடித்துள்ளதால், மினரல் வாட்டர் பாட்டில்களின் விற்பனையும் சூடு பிடித்துள்ளது.
பிப்., 5ல், 1.30 லட்சம் பாட்டில்களாக உயர்ந்த விற்பனை, பிப்., 9ல், 1.95 லட்சமாக அதிகரித்துள்ளது. மே மாதத்தில் அக்னி நட்சத்திரத்தின் போது, தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, விற்பனைக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|