பதிவு செய்த நாள்
12 பிப்2019
01:46
கிரேட்டர் நொய்டா:‘‘இந்தியாவில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோலிய ரசாயன திட்டங்களில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளோம்,’’ என, மேற்காசிய வளைகுடாவைச் சேர்ந்த, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அமைச்சர், சுல்தான் அகமது அல் ஜபார் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:எங்களுக்கு மிக முக்கிய சந்தையாக விளங்கும் இந்தியாவுடன் இணைந்து, கச்சா எண்ணெய் சேமிப்பு, பெட்ரோலிய ரசாயனம் உள்ளிட்ட திட்டங்களில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளோம்.
மஹாராஷ்டிர மாநிலம், ரத்னகிரியில், ஆண்டுக்கு, 6 கோடி டன் பெட்ரோலிய சுத்திகரிப்பு தொழிற்சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது.இதில், ஐக்கிய அரபு எமிரேட்சின், அரம்கோ மற்றும் அட்நாக் நிறுவனங்கள், 50 சதவீத பங்கு மூலதனம் மேற்கொள்கின்றன.
கர்நாடக மாநிலம், மங்களூரு மற்றும் படூரில், பூமிக்கு அடியில் உள்ள, மத்திய அரசின் கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்கில், அட்நாக் நிறுவனம், கச்சா எண்ணெய் சேமிக்க, ஒப்பந்தம் செய்துள்ளது. அரம்கோ நிறுவனம், இந்தியாவில், பெட்ரோலிய பொருட்களின் சில்லரை விற்பனையிலும் களமிறங்க ஆர்வமாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
உ.பி.,யில், பெட்ரோலிய தொழில்நுட்ப மாநாட்டில், சுல்தான் அகமது அல் ஜபாருக்கு, ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருதை, பிரதமர் மோடி வழங்கினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|