பதிவு செய்த நாள்
25 பிப்2019
23:20
புதுடில்லி : தேசிய நிறுவனங்கள் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம், அதன் அனுமதியின்றி, எந்தவொரு வங்கியோ, நிதி நிறுவனமோ, ஐ.எல்., அண்டு எப்.எஸ்., குழும நிறுவனங்களின் கடன்களை, வாராக்கடன் பிரிவில் சேர்க்கக் கூடாது என, உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு, ஐ.எல்., அண்டு எப்.எஸ்., குழும நிறுவனங்களின் கடன்களை மறுசீரமைக்கும் திட்டத்தை உருவாக்கி உள்ளது. இந்நிலையில், அக்கடன்கள், வாராக்கடன்கள் பிரிவில் சேர்க்கப்பட்டால், நிறுவனங்களின் புனரமைப்பு பணியும், முதலீட்டாளர்களும் பாதிக்கப்படுவர்.
இது தொடர்பான, மத்திய அரசின் விளக்கத்தை ஏற்று, ஐ.எல்., அண்டு எப்.எஸ்., நிறுவனங்களின் கடன்களை, அனுமதியின்றி வாராக்கடன் பிரிவில் சேர்க்க, தேசிய நிறுவனங்கள் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தடை விதித்து உள்ளது.
இத்தீர்ப்பாயம் சமீபத்தில், ஐ.எல்., அண்டு எப்.எஸ்., குழுமத்தைச் சேர்ந்த, 22 நிறுவனங்களின் கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. அத்துடன், கடன் மறுசீரமைப்பு பணிகளை மேற்பார்வையிட, சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி, டி.கே.ஜெயின் தலைமையில் குழு அமைக்கவும் ஒப்புதல் அளித்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|