வங்கி அதிகாரிகள் ஊக்க ஊதியத்திற்கு கட்டுப்பாடு வங்கி அதிகாரிகள் ஊக்க ஊதியத்திற்கு கட்டுப்பாடு ... மீண்டும் போர் பதற்றம் : பங்குச்சந்தைகள் சரிவுடன் நிறைவு மீண்டும் போர் பதற்றம் : பங்குச்சந்தைகள் சரிவுடன் நிறைவு ...
கடன் தீர்வில் பின்வாங்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை; திவால் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த மத்திய அரசு முடிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 பிப்
2019
23:32

புதுடில்லி : ‘‘நலிந்த நிறுவனங்களின் கடன் தீர்வு திட்டத்தில் பங்கேற்று, பின்வாங்கும் நிறுவனங்கள் மீது, திவால் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வாராக் கடன் தொடர்பாக, பல நிறுவனங்கள் மீது, திவால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அத்தகைய நிறுவனங்களை கையகப்படுத்த முன்வரும் பல நிறுவனங்கள், கொடுத்த வாக்குறுதிப்படி நடக்காமல், பின்வாங்கி விடுகின்றன.இது, கடன் பெற்ற நிறுவனங்கள் மற்றும் கடன் வழங்கிய வங்கிகளை ஏமாற்றத்திற்கு உள்ளாக்குகிறது. அதுமட்டுமின்றி, திவால் சட்டத்தின் கீழ், பல மாதங்களாக மேற்கொண்ட பல்வேறு நிர்வாக நடவடிக்கைகளும் பயனற்றதாகிறது.

அதனால், வாக்கு தவறும் நிறுவனங்கள் மீது, திவால் சட்டத்தின் கீழ், கடும் நடவடிக்கை எடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.இது குறித்து, மத்திய நிறுவன விவகாரங்கள் துறை செயலர் இன்ஜெட்டி ஸ்ரீனிவாஸ் கூறியதாவது:திவால் நடவடிக்கைக்கு ஆளான நிறுவனங்களின் கடன்களுக்கு தீர்வு காண பல நிறுவனங்கள் முன் வருகின்றன. ஆனால், சில நிறுவனங்கள், ஓராண்டு கடந்த பிறகும், கடன் தீர்வு திட்டத்தை, நிறைவேற்றாமல் பின்வாங்கி விடுகின்றன.

இதனால், கடன் தீர்வுக்காக எடுத்த அனைத்து முயற்சிகள், பணம், நேரம் ஆகியவை வீணாகின்றன.இத்தகைய நிறுவனங்களிடம், கடன் தீர்வுக்காக செலவிடப்பட்ட மொத்த தொகையை வசூலிப்பதா அல்லது குற்ற நடவடிக்கை எடுப்பதா என்பது குறித்து, பரிசீலிக்கப்பட்டு வருகிறது.வாக்குறுதி தவறும் நிறுவனங்கள், மீண்டும் கடன் தீர்வு திட்டத்தில் பங்கேற்க தடை விதிப்பது குறித்தும் ஆராய்ந்து வருகிறோம்.

எந்தவொரு நிறுவனமும், கடன் தீர்வு திட்டத்திற்கு ஒப்புக் கொண்டு, வேண்டுமென்றே பின்வாங்கினால், அதன் நிறுவனருக்கு ஓராண்டுக்கு குறையாமல் சிறைத் தண்டனை மற்றும், ௧ லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க, திவால் சட்டம், பிரிவு, 74 வழி வகை செய்கிறது.இதை, ஐந்து ஆண்டுகள் சிறை மற்றும் ஒரு கோடி ரூபாய் அபராதமாக உயர்த்துவது குறித்து, பரிசீலிக்கப்படுகிறது.

மேலும், கடன் தீர்வு திட்டத்தில் பங்கேற்று, பின்வாங்கும்பட்சத்தில், ஒரு நிறுவனம் செலுத்தும் முன்வைப்பு தொகையை முற்றிலுமாகவோ அல்லது ஒரு பகுதியையோ பிடித்தம் செய்து கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அறிவிப்பை, மத்திய அரசு வெளியிடும்.இவ்வாறு அவர் கூறினார்.

காலை வாரிய, ‘லிபர்டி ஹவுஸ்’:
பொதுத் துறையைச் சேர்ந்த, கார்ப்பரேஷன் வங்கி, ஆம்டெக் ஆட்டோ நிறுவனத்தின் மீது, திவால் நடவடிக்கை கோரி, தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயத்தில் விண்ணப்பித்தது. இதையடுத்து, ஆம்டெக் நிறுவனத்தின், 12 ஆயிரத்து, 603 கோடி ரூபாய் கடன் தீர்வு திட்டத்தை ஏற்க, பிரிட்டனைச் சேர்ந்த, லிபர்டி ஹவுஸ் நிறுவனம் முன்வந்தது. ஆனால், ஐந்து மாதங்கள் கடந்தும், முதற்கட்டமாக செலுத்த வேண்டிய, 3,225 கோடி ரூபாயை, லிபர்டி ஹவுஸ் செலுத்தவில்லை. இதனால், கடன் அளித்த நிறுவனங்கள், மீண்டும் தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயத்தை நாட, முடிவெடுத்துள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)