சிறிய நிறுவனங்களுக்கு, ரூ.5 லட்சம் கோடி தேவை; வங்கிகளுக்கு கடன் வழங்கும் வாய்ப்பு காத்திருக்கிறது சிறிய நிறுவனங்களுக்கு, ரூ.5 லட்சம் கோடி தேவை; வங்கிகளுக்கு கடன் வழங்கும் ... ...  ஜி.எஸ்.டி.,யில் ரூ.20 ஆயிரம் கோடி மோசடி கண்டுபிடிப்பு; முறைகேடுகள் நடப்பதை தடுக்க வரித் துறை தீவிரம் ஜி.எஸ்.டி.,யில் ரூ.20 ஆயிரம் கோடி மோசடி கண்டுபிடிப்பு; முறைகேடுகள் நடப்பதை ... ...
போர் பதற்றத்தால் பங்குச் சந்தை சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 பிப்
2019
23:32

மும்பை : இந்தியா – பாக்., இடையே எழுந்துள்ள போர் பதற்றத்தால், நேற்று, பங்குச் சந்தை வர்த்தகத்தின் இடையே கடும் சரிவு ஏற்பட்டது.

நேற்று, இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற, பாக்., போர் விமானங்களின் முயற்சி முறியடிக்கப்பட்டது. எனினும், தொழில்நுட்ப கோளாறால், இந்திய போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. அத்துடன், இந்திய வீரர் ஒருவரை காணவில்லை என்ற தகவல் வெளியானது.இதனால், காலையில் எழுச்சியுடன் வர்த்தகத்தை துவக்கிய, இந்திய பங்குச் சந்தை, பின் பெரும் சரிவை கண்டது. மும்பை பங்குச் சந்தையில், வர்த்தகத்தின் இடையே,‘சென்செக்ஸ்’ 600 புள்ளிகள் வரை சரிவடைந்தது.

இருந்தபோதிலும், பிற்பகலில் பங்குச் சந்தை சூடு பிடித்தது. வர்த்தகத்தின் இறுதியில், சென்செக்ஸ், முன்தினத்தை விட, 68.28 புள்ளிகள் குறைந்து, 35,905.43 புள்ளிகளில் நிலை கொண்டது.தேசிய பங்குச் சந்தையின், ‘நிப்டி’ குறியீடு, 28.65 புள்ளிகள் சரிந்து, 10,806.65 புள்ளிகளில் நிலை பெற்றது. இக்குறியீடு, வர்த்தகத்தின் இடையே, 200 புள்ளிகளுக்கும் அதிகமாக சரிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த சில நாட்களுக்கு, இரு நாடுகள் இடையே பதற்றமான சூழல் நிலவும் என்பதால், பங்குகளில் மிகுந்த எச்சரிக்கையுடன் முதலீடு செய்யுமாறு வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)