பதிவு செய்த நாள்
27 பிப்2019
23:32
மும்பை : இந்தியா – பாக்., இடையே எழுந்துள்ள போர் பதற்றத்தால், நேற்று, பங்குச் சந்தை வர்த்தகத்தின் இடையே கடும் சரிவு ஏற்பட்டது.
நேற்று, இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற, பாக்., போர் விமானங்களின் முயற்சி முறியடிக்கப்பட்டது. எனினும், தொழில்நுட்ப கோளாறால், இந்திய போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. அத்துடன், இந்திய வீரர் ஒருவரை காணவில்லை என்ற தகவல் வெளியானது.இதனால், காலையில் எழுச்சியுடன் வர்த்தகத்தை துவக்கிய, இந்திய பங்குச் சந்தை, பின் பெரும் சரிவை கண்டது. மும்பை பங்குச் சந்தையில், வர்த்தகத்தின் இடையே,‘சென்செக்ஸ்’ 600 புள்ளிகள் வரை சரிவடைந்தது.
இருந்தபோதிலும், பிற்பகலில் பங்குச் சந்தை சூடு பிடித்தது. வர்த்தகத்தின் இறுதியில், சென்செக்ஸ், முன்தினத்தை விட, 68.28 புள்ளிகள் குறைந்து, 35,905.43 புள்ளிகளில் நிலை கொண்டது.தேசிய பங்குச் சந்தையின், ‘நிப்டி’ குறியீடு, 28.65 புள்ளிகள் சரிந்து, 10,806.65 புள்ளிகளில் நிலை பெற்றது. இக்குறியீடு, வர்த்தகத்தின் இடையே, 200 புள்ளிகளுக்கும் அதிகமாக சரிவடைந்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்த சில நாட்களுக்கு, இரு நாடுகள் இடையே பதற்றமான சூழல் நிலவும் என்பதால், பங்குகளில் மிகுந்த எச்சரிக்கையுடன் முதலீடு செய்யுமாறு வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|