பதிவு செய்த நாள்
01 மார்2019
10:53
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் கடைசிநாளில் உயர்வுடன் வர்த்தகமாகின. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் (மார்ச் 1, காலை 9.15 மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 264.99 புள்ளிகள் உயர்ந்து 36,132.43ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 76.65 புள்ளிகள் உயர்ந்து 10,869.15ஆகவும் வர்த்தகமாகின.
முன்னணி நிறுவன பங்குகள் உயர்ந்தது, அந்நிய முதலீடுகள் அதிகரிப்பு போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ரூபாயின் மதிப்பு
பங்குச்சந்தைகள் உயர்வுடன் இருந்தபோதிலும் ரூபாயின் மதிப்பு சரிவுடன் காணப்படுகிறது. அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 14 காசுகள் சரிந்து ரூ.70.86ஆக வர்த்தகமானது. இறக்குமதியாளர்களுக்கு டாலரின் தேவை அதிகரித்து இருப்பதன் எதிரொலியாக ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|