தமிழக சாப்ட்வேர் ஏற்றுமதி 10 சதவீதம் அதிகரிப்பு  தமிழக சாப்ட்வேர் ஏற்றுமதி 10 சதவீதம் அதிகரிப்பு ...  தயாரிப்பு துறை  14 மாதங்கள்  காணாத வளர்ச்சிபுதிய ஆர்டர், விற்பனை, வேலைவாய்ப்பு அதிகரிப்பு தயாரிப்பு துறை 14 மாதங்கள் காணாத வளர்ச்சிபுதிய ஆர்டர், விற்பனை, ... ...
புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட 366தொழில் நிறுவனங்களில் உற்பத்தி துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மார்
2019
23:23

சென்னை:உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட, குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில், இதுவரை, 366 தொழில் நிறுவனங்கள், 721.80 கோடி ரூபாயில், உற்பத்தியை துவக்கி உள்ளன.

சென்னையில் நடந்த, இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், 12 ஆயிரத்து, 360 குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், அடுத்த இரண்டு ஆண்டுகளில், 32 ஆயிரத்து, 205 கோடி ரூபாய் முதலீடு செய்ய, ஒப்பந்தம் மேற்கொண்டன. இந்த நிறுவனங்களுக்கு, தேவையான நிலம் கையகப்படுத்துதல், அரசுத் துறை நிறுவனங்களிடமிருந்து பெற வேண்டிய, சட்டபூர்வமான உரிமங்கள், நிதி வசதி, மின் இணைப்பு பெறுதல் உள்ளிட்ட, அனைத்து உதவிகளையும் அளிக்கப்படும்.

தொழில் நிறுவனங்கள் விரைவில் தொழில் துவங்கிட, தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.இதன் ஒரு பகுதியாக, புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட, 403 நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல் கூட்டம், நேற்று முன்தினம், சென்னை, கிண்டியில் உள்ள, தனியார் ஓட்டலில் நடந்தது.

இக்கூட்டத்தில், தொழில் முனைவோர் கடன் வசதி பெற, வங்கி மேலாளர்களுடன், நேரடி சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அரசுத் துறைகளிடமிருந்து, சட்டபூர்வமான உரிமங்கள் பெற, துறை அதிகாரிகளுடன் நேரடியாக பேச ஏற்பாடு செய்யப்பட்டது.

இது குறித்து, தொழில் வணிக இயக்குனர், ராஜேந்திர குமார் கூறியதாவது:

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட, குறு, சிறு, நடுத்தர தொழில் முனைவோர்களில், இதுவரை, 366 தொழில் நிறுவனங்கள், 721.80 கோடி ரூபாய் முதலீட்டில், உற்பத்தியை துவக்கி உள்ளன. இதனால், 4,863 பேர் வேலைவாய்ப்பு களை பெற்றுள்ளனர்.புரிந்துணர்வு ஒப்பந்தம்மேற்கொண்டுள்ள, தொழில் முனைவோர், விரைவில் தங்கள் தொழிலை துவங்கிட, மாவட்ட தொழில் மையம் சார்பில், அனைத்து உதவிகளையும் வழங்கிட, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)