பதிவு செய்த நாள்
01 மார்2019
23:23
சென்னை:உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட, குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில், இதுவரை, 366 தொழில் நிறுவனங்கள், 721.80 கோடி ரூபாயில், உற்பத்தியை துவக்கி உள்ளன.
சென்னையில் நடந்த, இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், 12 ஆயிரத்து, 360 குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், அடுத்த இரண்டு ஆண்டுகளில், 32 ஆயிரத்து, 205 கோடி ரூபாய் முதலீடு செய்ய, ஒப்பந்தம் மேற்கொண்டன. இந்த நிறுவனங்களுக்கு, தேவையான நிலம் கையகப்படுத்துதல், அரசுத் துறை நிறுவனங்களிடமிருந்து பெற வேண்டிய, சட்டபூர்வமான உரிமங்கள், நிதி வசதி, மின் இணைப்பு பெறுதல் உள்ளிட்ட, அனைத்து உதவிகளையும் அளிக்கப்படும்.
தொழில் நிறுவனங்கள் விரைவில் தொழில் துவங்கிட, தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.இதன் ஒரு பகுதியாக, புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட, 403 நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல் கூட்டம், நேற்று முன்தினம், சென்னை, கிண்டியில் உள்ள, தனியார் ஓட்டலில் நடந்தது.
இக்கூட்டத்தில், தொழில் முனைவோர் கடன் வசதி பெற, வங்கி மேலாளர்களுடன், நேரடி சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அரசுத் துறைகளிடமிருந்து, சட்டபூர்வமான உரிமங்கள் பெற, துறை அதிகாரிகளுடன் நேரடியாக பேச ஏற்பாடு செய்யப்பட்டது.
இது குறித்து, தொழில் வணிக இயக்குனர், ராஜேந்திர குமார் கூறியதாவது:
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட, குறு, சிறு, நடுத்தர தொழில் முனைவோர்களில், இதுவரை, 366 தொழில் நிறுவனங்கள், 721.80 கோடி ரூபாய் முதலீட்டில், உற்பத்தியை துவக்கி உள்ளன. இதனால், 4,863 பேர் வேலைவாய்ப்பு களை பெற்றுள்ளனர்.புரிந்துணர்வு ஒப்பந்தம்மேற்கொண்டுள்ள, தொழில் முனைவோர், விரைவில் தங்கள் தொழிலை துவங்கிட, மாவட்ட தொழில் மையம் சார்பில், அனைத்து உதவிகளையும் வழங்கிட, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|