பதிவு செய்த நாள்
03 மார்2019
23:56
கச்சா எண்ணெய்
சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை, கடந்த வாரம், 1 பேரலுக்கு, 3 அமெரிக்க டாலர் குறைந்து வர்த்தகம் முடிவுற்றது. ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில், எண்ணெய் விலை உயர்ந்து வர்த்தகம் ஆனது. தற்போது, மார்ச் மாத துவக்கத்தில் சற்று சரிவு நிலை காணப்படுகிறது.
கடந்த
வார வியாபாரம், அதற்கு முன் இருந்த நிலையிலேயே ஆரம்பித்த போதிலும்,
ஆரம்ப நாட்களில் விலை உயர்ந்து வர்த்தகமானது. இருப்பினும், வார
இறுதி நாளான வெள்ளி அன்று, கடும் சரிவை சந்தித்தது.அமெரிக்காவின் பொருளாதார காரணியான, ஐ.எஸ்.எம்., எனப்படும், தொழில் துறை வளர்ச்சி குறியீட்டு எண், எதிர்பார்த்ததை விட குறைந்து விட்டது.
கடந்த, 2014 நவம்பர் மாதத்துக்கு பின் வந்த குறைவான
வளர்ச்சி குறியீடு இதுவே ஆகும். இதனால் தொழில் வளர்ச்சி குறையும்,
கச்சா எண்ணெய் தேவை பாதிக்கப்படும் என்ற கருத்து நிலவியது.மேலும்,
சந்தையில் அமெரிக்க நாணய குறியீட்டு எண், 10 மாத உயர்வை எட்டியது.
இது போன்ற நிலைகள், கச்சா எண்ணெய் விலை சரிய காரணமாக அமைந்தன.
‘ராய்ட்டர்ஸ்’ நிறுவனத்தின் கருத்துப்படி, ‘ஒபெக்’ நாடுகளின் பிப்ரவரி மாத தினசரி எண்ணெய் ஏற்றுமதி, ஜனவரி
மாதத்தில் இருந்ததை விட, 3 லட்சம் பேரல் குறைந்திருந்தது. இன்னும்
சொல்வதென்றால், 2015ம் ஆண்டுக்கு பின், பிப்ரவரி மாதத்தில் தான்
குறைந்த
அளவிலான ஏற்றுமதி நடைபெற்றது.
ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மட்டும், எண்ணெய் விலை, 1 பேரலுக்கு, 15 அமெரிக்க டாலர் உயர்ந்திருந்தது.அதாவது,
கடந்த ஆண்டு அக்டோபர் முதல், டிசம்பர் வரை குறைந்திருந்த எண்ணெய்
விலை, ஒபெக் மற்றும் ரஷ்ய நாடுகளின் உற்பத்தி குறைப்பு நடவடிக்கை
காரணமாகவும் இந்த விலை ஏற்றம் காணப்பட்டது.
ஜனவரி,
28ம் தேதி, அமெரிக்கா, வெனிசுலா நாட்டின் மீது கொண்டு வந்த பொருளாதார
தடை காரணமாக, அந்நாட்டின் எண்ணெய் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டது; 40 சதவீதத்துக்கு மேல் ஏற்றுமதி சரிந்தது.ரஷ்ய நாட்டின் எண்ணெய் உற்பத்தி, பிப்ரவரி மாதத்தில், ஒப்பந்தப்படி தினசரி, 97 ஆயிரம் பேரல்கள் குறைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒபெக்
மற்றும் ஒபெக்கில் இல்லாத நாடுகள், அடுத்த மாதம் மத்தியில்
சந்தித்து, அவற்றின் எண்ணெய் உற்பத்தி குறித்து ஆலோசிக்க உள்ளன.
சீனா, கொரியா ஆகிய நாடுகளின் தொழில் துறை வளர்ச்சி குறியீடு தொடர்ந்து
சரிந்து வருவதும், கச்சா எண்ணெய் தேவை குறைவை வெளிப்படுத்துகிறது.இருப்பினும்,
நம் நாட்டின் டீசல் தேவை மற்றும் நுகர்வு, வரலாற்று உச்சத்தை
எட்டியுள்ளது. அதாவது, 7 சதவீதம் உயர்ந்துள்ளது.
தங்கம் வெள்ளி
இந்த
ஆண்டின் ஆரம்பம் முதல், தங்கம் மற்றும் வெள்ளி விலை, தொடர்ந்து
உயர்ந்து வந்த நிலையில், கடந்த வாரம், 3 சதவீதத்துக்கு மேல் சரிந்தது.
சர்வதேச சந்தையில், 1 அவுன்ஸ் தங்கம், 45 அமெரிக்க டாலர் குறைந்து,
1,295 டாலர் என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.
கடந்த வாரத்தில், வியாழன் அன்று, அமெரிக்க பொருளாதார காரணியான, ஜி.டி.பி., விபரம்
வெளிவந்தது. இது, எதிர்பார்த்ததைவிட சற்று உயர்ந்து, பொருளாதார வளர்ச்சிக்கு சாதகமாக வந்தது.
இதன்
காரணமாக, அமெரிக்க அரசு சார்ந்த கருவூலங்களின் ஆதாயம் பெருகும்;
முதலீட்டாளர்களின் ஆர்வம், தங்கம் மீது குறையும் என்ற கண்ணோட்டம்
உருவானது. அதனால், வார இறுதி நாட்களான வியாழன், வெள்ளி கடும் விலை சரிவு ஏற்பட்டது.வெள்ளியின் விலையும் கடும் சரிவை சந்தித்துள்ளது.
கடந்த
ஆண்டு பிப்ரவரிக்கு பின் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவு இதுவே ஆகும்.
பங்குச் சந்தைகளின் வளர்ச்சி, தங்கம் மற்றும் வெள்ளியின் மீதான
முதலீட்டு ஆர்வத்தை குறைத்துள்ளது என்று கூறலாம்.எஸ்.பி.டி.ஆர்.,
எனப்படும், தங்க இருப்பு வைப்பு நிதியின் இருப்பு, கடந்த டிசம்பர்
மாதத்தை காட்டிலும் தற்போது குறைவாக உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் முதல், நடப்பாண்டு பிப்ரவரி வரை, உயர்வில் வர்த்தகம் ஆன தங்கம், தற்போது சரிவில் வர்த்தகமாகி வருகிறது.சர்வதேச சந்தையில், 1 அவுன்ஸ் தங்கம், 1,275 டாலர் என்பது நல்ல சப்போர்ட்.
செம்பு
அமெரிக்க
பொருள் வாணிப சந்தையில், செம்பு விலையானது, கடந்த ஆறு மாதங்களாக,
ஒரே அளவிலான ஏற்ற, இறக்கங்களுடன் வர்த்தகமாகி வருகிறது. அதாவது,
1 பவுண்டு செம்பின் விலை, 2.50 முதல், 3 டாலர் என்ற நிலையில்
வர்த்தகமாகி வருகிறது.
இதற்கு, இரு முக்கிய காரணங்கள் உள்ளன.
முதலாவதாக, அமெரிக்க நாணயத்தின் மதிப்பு உயர்வு. இரண்டாவதாக,
நிலவி வரும் நாடுகளுக்கு இடையேயான வர்த்தக மோதல். குறிப்பாக, சீனா,
அமெரிக்கா ஆகிய நாடுகள், இறக்குமதி பொருட்களுக்கான வரியை உயர்த்தி
வருகின்றன. இதனால், அனைத்து நிலைகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, தொழிற்சாலை மூலப்பொருட்களான செம்பு, நிக்கல், இரும்பு
உள்ளிட்ட பொருட்களின் விலையில் நல்ல தாக்கம் ஏற்பட்டுள்ளது.
உலக
அளவில், செம்பு நுகர்வில், சீனா முதலிடம் வகிக்கிறது. சீனாவின் தேவை
மற்றும் இறக்குமதி, செம்பின் விலையில் மாற்றங்களை ஏற்படுத்தும்.
கடந்த சில மாதங்களாக, சீனாவின் நுகர்வு தேவை குறைந்ததன் காரணமாக,
விலை கடுமையாக சரிந்துள்ளது. வரும் நாட்களில் இத்தகைய போக்கு
கட்டுக்குள் கொண்டு வரப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|