பதிவு செய்த நாள்
08 மார்2019
00:09
கிருஷ்ணகிரி:‘பல்வேறு மாநிலங்களுக்கு, கிருஷ்ணகிரியில்இருந்து, புளி ஏற்றுமதி செய்யப்படுவதால், புளி ஏற்றுமதி மண்டலம் அமைக்க வேண்டும்’ என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி பழையபேட்டையில், 30க்கும் மேற்பட்ட புளி மண்டிகள் உள்ளன. இங்கு, ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகளில், புளி விற்பனை சந்தை கூடுகிறது.இந்த சந்தைக்கு, தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வருகின்றனர். இந்நிலையில், இங்கு, ஏற்றுமதி மண்டலம் அமைக்கும் கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து, விவசாயிகள் கூறியதாவது:இங்கிருந்து, பல்வேறு மாநிலங்களுக்கு, புளி ஏற்றுமதி செய்யப்படுவதால், ஏற்றுமதி மண்டலம் அமைக்க வேண்டும். இதனால், தனி இடம் ஒதுக்கப்படுவதால், போக்குவரத்து நெருக்கடி குறையும். இடைத்தரகர்கள் தொல்லையின்றி, நேரடியாக விவசாயிகள், பொதுமக்கள், வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|