பதிவு செய்த நாள்
08 மார்2019
23:23
மும்பை:‘‘நிதித் துறையின் ஸ்திரத்தன்மைக்கும், சிறப்பான செயல்பாட்டிற்கும், தர நிர்ணய நிறுவனங்கள், குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகின்றன,’’ என, ரிசர்வ் வங்கி கவர்னர், சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
அவர், நேற்று முன்தினம், ‘கேர், இக்ரா, ஐ.ஆர்.ஆர்.,’ உள்ளிட்ட, தர நிர்ணய நிறுவனங்களின் தலைவர்களுடன் பேச்சு நடத்தியது குறித்து, ‘டுவிட்டரில்’ கூறியிருப்பதாவது:
ஒரு நிறுவனம் அல்லது துறையின் கடன் தகுதி மதிப்பை, தர நிர்ணய நிறுவனங்கள் நிர்ணயிக் கின்றன. அதன் மூலம், நிறுவனங்களின் பலம், பலவீனம் உள்ளிட்டவற்றை அறிந்து, அதற்கேற்ப முதலீட்டு திட்டங்களை வகுக்க முடிகிறது.
இந்த வகையில், தர நிர்ணய நிறுவனங்கள், நிதித் துறையின் ஸ்திரத்தன்மைக்கும், சிறப்பான செயல்பாட்டிற்கும் முக்கிய பங்களிப்பை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. அத்தகைய நிறுவனங்களின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியது பயனுள்ளதாக இருந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|