பதிவு செய்த நாள்
08 மார்2019
23:25
மும்பை:'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள், 2018ல், தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள், துணிகர முதலீட்டு நிறுவனங்களிடம், 700 கோடி டாலர் திரட்டி உள்ளன.
இது குறித்து, 'யர்னஸ்ட்அண்டு யங்' நிறுவனம்வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:மின்னணு வர்த்தக நிறுவனங்களும், வலைதளங்களில் புதுமையான தொழில்களில் ஈடுபடும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களும், 2018ல், 700 கோடி டாலர் முதலீட்டை ஈர்த்துள்ளன.460 கோடி டாலர்இது, இந்திய ரூபாய் மதிப்பில், 50 ஆயிரம் கோடி. இத்தொகை, தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள், துணிகர முதலீட்டாளர்களிடம்இருந்து திரட்டப்பட்டுள்ளது.
இதில், 'ஓயோ, ஸ்விக்கி, பேடிஎம் மால், பைஜஸ், உதான், பைன் லேப்ஸ், ஸொமேடோ, பாலிசி பஜார் மற்றும் க்யூர்பிட்' போன்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், 460 கோடி டாலர் திரட்டியுள்ளன; சில பெரிய முதலீடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.'வால்மார்ட்' நிறுவனம், 1.12 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில், 'பிளிப்கார்ட்' நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது.
சீனாவின், 'அலிபாபா' நிறுவனம், பேடிஎம் மற்றும் பிக்பாஸ்கட் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது.'டென்சென்ட்ஸ்' நிறுவனம், 'டிரீம் - 11' நிறுவனத்திலும், 'நாஸ்பர்ஸ்' நிறுவனம், பைஜஸ் மற்றும் ஸ்விக்கி நிறுவனங்களிலும் முதலீடு மேற்கொண்டுள்ளது. நாட்டில், மின்னணு பயன்பாடு பரவலாகி வருகிறது.
மின்னணு பணப் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளன. பிராந்திய மொழி வசதி காரணமாக, கிராமப்புறங்களிலும் மின்னணு பயன்பாடு சூடுபிடித்து உள்ளது.குறைந்த கட்டணம்இதற்கு, மின்னணு பரிவர்த்தனையை ஊக்குவிக்க, மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் துணை புரிந்துள்ளன.
குறிப்பாக, 'டிஜிட்டல்இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, மேக் இன் இந்தியா' திட்டங்களும், அவற்றுக்கான ஊக்கச் சலுகைகளும், மின்னணு வர்த்தக வளர்ச்சிக்கு உதவுகிறது. அத்துடன், 'மொபைல் டேட்டா' கட்டணம் மிகக் குறைவாக உள்ளதும், மின்னணு நிறுவனங்கள் வளர்ச்சிக்கு துணை புரிந்து வருகிறது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|