தமிழக இல்லத்தரசிகள் இருவருக்கு தொழில் துவங்க தலா ரூ.10 லட்சம்தமிழக இல்லத்தரசிகள் இருவருக்கு தொழில் துவங்க தலா ரூ.10 லட்சம் ... ‘இ – சேவை’யில் செர்வர் பிரச்னை ஐ.ஐ.டி., நிபுணர்கள் ஆய்வு ‘இ – சேவை’யில் செர்வர் பிரச்னை ஐ.ஐ.டி., நிபுணர்கள் ஆய்வு ...
புதிய வணிக வரி மண்டலம் ஈரோட்டில் அமைகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மார்
2019
23:47

திருப்பூர்:திருப்பூர், கரூர், ஈரோடு மாவட்டங்களை ஒருங்கிணைத்து, ஈரோடு வணிக வரி மண்டலம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.தமிழக வணிக வரித்துறையில், ஜி.எஸ்.டி.,யை திறம்பட செயல்படுத்தும் வகையில், வணிக வரித்துறையை மறுசீரமைப்பு செய்ய கோரிக்கை எழுந்தது.
இதற்காக, மறுசீரமைப்பு கமிட்டி அமைத்து, வணிக வரித்துறை கருத்துரு பெற்றது, அதனடிப்படையில், தற்போது, சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.மேலும், வணிக வரித்துறையின் அமலாக்க பிரிவு, நுண்ணறிவு பிரிவு என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோவை மண்டலத்திலிருந்து, திருப்பூர்; திருச்சி மண்டலத்திலிருந்து, கரூர்; சேலம் மண்டலத்தில் இருந்து, ஈரோடு மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றை ஒருங்கிணைத்து, புதிதாக, ஈரோடு வணிக வரி மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னையில் நான்கு, வேலுார், சேலம், திருச்சி, கோவை, மதுரை, நெல்லையுடன் ஈரோடும் சேர்த்து, வணிக வரித்துறை மண்டல எண்ணிக்கை, 11 ஆக உயர்ந்து உள்ளது.
மேலும், 1,500 முதல், 2,000 வர்த்தகர்கள் கொண்டது, ஒரு சரகமாக பிரிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் வணிக வரி மாவட்டம், ஒன்பது சரகங்களுடன் இயங்கி வந்தது. மறுசீரமைப்பில், அதிக வர்த்தகர் இருந்த சரகங்கள் பிரிக்கப்பட்டு, மாவட்ட மொத்த சரகங்கள் எண்ணிக்கை, 16 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வணிக வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:திருப்பூரை பொருத்தவரை, அதிக வர்த்தகர்கள், வரி வருவாய் மிகுந்த மாவட்டம். நாட்டின் பின்னலாடை நகரம் என்கிற அந்தஸ்தும் பெற்றுள்ளது. திருப்பூர் வணிக வரி மண்டலம் உருவாக்குவதற்கு பதில், கோவையிலிருந்து பிரித்து, ஈரோடு மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளது.
திருப்பூரில் மட்டும் 40 ஆயிரம் வர்த்தகர்கள் உள்ளனர். எனவே, திருப்பூர், பொள்ளாச்சி, காங்ேகயம், தாராபுரம் பகுதிகளை ஒருங்கிணைத்து, எதிர்காலத்தில், திருப்பூர் வணிக வரி மண்டலம் உருவாக்கலாம்.இவ்வாறு வணிக வரித்துறை அதிகாரிகள் கூறினர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)