பதிவு செய்த நாள்
11 மார்2019
23:47
திருப்பூர்:திருப்பூர், கரூர், ஈரோடு மாவட்டங்களை ஒருங்கிணைத்து, ஈரோடு வணிக வரி மண்டலம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.தமிழக வணிக வரித்துறையில், ஜி.எஸ்.டி.,யை திறம்பட செயல்படுத்தும் வகையில், வணிக வரித்துறையை மறுசீரமைப்பு செய்ய கோரிக்கை எழுந்தது.
இதற்காக, மறுசீரமைப்பு கமிட்டி அமைத்து, வணிக வரித்துறை கருத்துரு பெற்றது, அதனடிப்படையில், தற்போது, சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.மேலும், வணிக வரித்துறையின் அமலாக்க பிரிவு, நுண்ணறிவு பிரிவு என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோவை மண்டலத்திலிருந்து, திருப்பூர்; திருச்சி மண்டலத்திலிருந்து, கரூர்; சேலம் மண்டலத்தில் இருந்து, ஈரோடு மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றை ஒருங்கிணைத்து, புதிதாக, ஈரோடு வணிக வரி மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னையில் நான்கு, வேலுார், சேலம், திருச்சி, கோவை, மதுரை, நெல்லையுடன் ஈரோடும் சேர்த்து, வணிக வரித்துறை மண்டல எண்ணிக்கை, 11 ஆக உயர்ந்து உள்ளது.
மேலும், 1,500 முதல், 2,000 வர்த்தகர்கள் கொண்டது, ஒரு சரகமாக பிரிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் வணிக வரி மாவட்டம், ஒன்பது சரகங்களுடன் இயங்கி வந்தது. மறுசீரமைப்பில், அதிக வர்த்தகர் இருந்த சரகங்கள் பிரிக்கப்பட்டு, மாவட்ட மொத்த சரகங்கள் எண்ணிக்கை, 16 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வணிக வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:திருப்பூரை பொருத்தவரை, அதிக வர்த்தகர்கள், வரி வருவாய் மிகுந்த மாவட்டம். நாட்டின் பின்னலாடை நகரம் என்கிற அந்தஸ்தும் பெற்றுள்ளது. திருப்பூர் வணிக வரி மண்டலம் உருவாக்குவதற்கு பதில், கோவையிலிருந்து பிரித்து, ஈரோடு மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளது.
திருப்பூரில் மட்டும் 40 ஆயிரம் வர்த்தகர்கள் உள்ளனர். எனவே, திருப்பூர், பொள்ளாச்சி, காங்ேகயம், தாராபுரம் பகுதிகளை ஒருங்கிணைத்து, எதிர்காலத்தில், திருப்பூர் வணிக வரி மண்டலம் உருவாக்கலாம்.இவ்வாறு வணிக வரித்துறை அதிகாரிகள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|