பதிவு செய்த நாள்
11 மார்2019
23:52
அரசு, ‘இ – சேவை’ வழங்கும், டி.என்.இ.ஜி.ஏ.,வின் பிரதான செர்வர் செயல்திறன் குறைவிற்கான காரணத்தை அறிய, ஐ.ஐ.டி., நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
மத்திய – மாநில அரசுகளின் சேவைகளை பெற, டி.என்.இ.ஜி.ஏ., எனும் தமிழ்நாடு மின்னாளுமை முகமை இயக்ககம், தமிழ்நாடு அரசு கேபிள், ‘டிவி’ நிறுவனம் வழியாக, அரசு ‘இ – சேவை’ மையத்தை செயல்படுத்தி வருகிறது.அரசு இ – சேவை மையத்தில், பிறப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ் உட்பட, 80க்கும் மேற்பட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன.இதன் செர்வரில் அடிக்கடி பிரச்னை ஏற்படுவதை அறிய, நிபுணர்கள் அமைக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, டி.என். இ.ஜி.ஏ., அதிகாரிகள் கூறியதாவது:பிரதான செர்வரின் செயல் திறன் சில வாரங்களாக குறைவாக இருக்கிறது. விண்ணப்பங்கள் அதிகம் பெறப்படும் நேரங்களில் மட்டுமே இது போன்று நிகழும்.தற்போது வழக்கமான விண்ணப்பங்கள் பெறும் நேரங்களிலும் இவ்வாறு இருக்கிறது. இதற்கான காரணம் தெரியவில்லை.
இதை கண்டுபிடிப்பதற்காக, ஐ.ஐ.டி.,யை சேர்ந்த நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு ஆய்வு நடத்தி வருகிறது. இதன் பின், செர்வர் செயல் திறன் குறைவுக்கான காரணம் தெரிய வரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|