பதிவு செய்த நாள்
11 மார்2019
23:59
புதுடில்லி:‘பண மதிப்பிழப்பு நடவடிக்கையால், கறுப்பு பணத்தை முழுமையாக ஒழிக்க முடியாது’ என, ரிசர்வ் வங்கி இயக்குனர் குழு, 2016ல், மத்திய அரசை எச்சரித்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
இது குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற விபரங்களை, சமூக ஆர்வலர், வெங்டேஷ் நாயக், காமன்வெல்த் மனித உரிமைகள் திட்ட வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.அதில் கூறப்பட்டு உள்ளதாவது:கடந்த, 2016, நவ., 8ல் பிரதமர் மோடி, உயர் மதிப்பு கரன்சிகள் செல்லாது என, அறிவித்தார். அதற்கு முன், அவர், ரிசர்வ் வங்கி இயக்குனர் குழுவுடன் பேச்சு நடத்தினார்.
அப்போது ‘பண மதிப்பிழப்பு நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்றபோதிலும், கறுப்பு பணத்தை முழுமையாக ஒழிக்க முடியாது. அது, ரியல் எஸ்டேட், தங்கம் போன்றவற்றில் முடங்கியுள்ளது. ‘மேலும், நாட்டின் வளர்ச்சி, குறுகிய காலத்திற்கு பாதிக்கப்படும். பொருளாதார வளர்ச்சி விகிதத்திற்கும், பணப் புழக்கத்திற்கும் அதிக வித்தியாசம் இல்லை’ என கூறி, அரசின் பரிந்துரைக்கு இயக்குனர் குழு ஆதரவு தெரிவிக்கவில்லை.ஆனால், அரசு தரப்பில், ‘நாட்டின் வளர்ச்சியில் பெரிய பாதிப்பு இருக்காது.
ரொக்கப் பயன்பாட்டை குறைக்கும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று’ என, தெரிவிக்கப்பட்டது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.பணமதிப்பிழப்பு நடவடிக்கையை தொடர்ந்து, புழக்கத்தில் இருந்த, 15.41 லட்சம் கோடி ரூபாயில், 15.31 லட்சம் கோடி ரூபாய் திரும்பப் பெறப்பட்டது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|