பதிவு செய்த நாள்
25 மார்2019
11:01
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் முதல்நாளில் கடும் சரிவை சந்தித்தன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(மார்ச் 25, காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 325.49 புள்ளிகள் சரிந்து 37,845.24ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 103.90 புள்ளிகள் சரிந்து 11,342.90ஆகவும் வர்த்தகமானது.
உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்படும் சரிவு, ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, முதலீட்டாளர்கள் லாபநோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்து வருவது போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் சரிவுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ரூபாயின் மதிப்பு சரிவு
அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 16 காசுகள் சரிந்து ரூ.69.11ஆக வர்த்தகமானது. மாத கடைசி என்பதால் இறக்குமதியாளர்களுக்கு டாலரின் தேவை அதிகரித்து இருப்பதன் எதிரொலியாக ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளதாக சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|