ஜெட் ஏர்வேசுக்கு கரிசனம் காட்டுவது ஏன்? வங்கிகள் கூட்டமைப்பிற்கு விஜய் மல்லையா கேள்வி ஜெட் ஏர்வேசுக்கு கரிசனம் காட்டுவது ஏன்? வங்கிகள் கூட்டமைப்பிற்கு விஜய் ... ...  பொருளாதாரம் வளர்கிறதா: ரகுராமுக்கு சந்தேகம் பொருளாதாரம் வளர்கிறதா: ரகுராமுக்கு சந்தேகம் ...
திவால் நடவடிக்கைக்கு குவிந்த, 12,000 விண்ணப்பங்கள்; 4,500 வழக்குகளில் தீர்வு : ரூ.2 லட்சம் கோடி வசூல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மார்
2019
07:05

புதுடில்லி: வாராக் கடன் தொடர்பாக, திவால் சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்கக் கோரி, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம், 12 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த, 2016, மே மாதம், திவால் சட்டம் அமலுக்கு வந்தது. இச்சட்டத்தின் கீழ், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டுள்ளன.அவற்றில், கடனை திரும்பத்தராத நிறுவனங்கள் மீது திவால் நடவடிக்கை எடுக்கக் கோரி, வங்கிகள், நிதி நிறுவனங்கள் விண்ணப்பிக்கின்றன. அவை, பரிசீலிக்கப்பட்டு, தீர்ப்பாயம் அனுமதி வழங்கும் பட்சத்தில், திவால் நடவடிக்கை துவங்கும்.

இது குறித்து, மத்திய நிறுவன விவகாரங்கள் துறை செயலர், இன்ஜெட்டி ஸ்ரீனிவாஸ் கூறியதாவது:திவால் சட்டம் அமலுக்கு வந்த பின், தற்போது வரை, அச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயங்களில், 12 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன.ஒரு சில தீர்ப்பாயங்களில், தாக்கல் செய்த விண்ணப்பங்களுக்கு நிகரான அளவிற்கு, வழக்குகள் பைசலாகின்றன. மொத்த விண்ணப்பங்களில், 4 ஆயிரத்து 500 வழக்குகள், தீர்ப்பாயத்திற்கு வெளியில் தீர்வு காணப்பட்டு உள்ளன. அவற்றின் மூலம், 2 லட்சம் கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. 1,500 விண்ணப்பங்கள் மீது, திவால் நடவடிக்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 6 ஆயிரம் விண்ணப்பங்கள், பரிசீலனையில் உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

தீர்வு காண வேண்டும்:
தற்போது, உணவு சாரா துறையின் கடன், 77 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இதில், தொழில் மற்றும் சேவைகள் துறையின் பங்கு, முறையே, 26 லட்சம் கோடி ரூபாய் மற்றும் 21 லட்சம் கோடி ரூபாய். இந்த இரு துறைகளின் மொத்த கடன், 47 லட்சம் கோடி ரூபாய். இது, உணவு சாரா துறையின் மொத்த கடனில், 70 சதவீதம். அதனால், எஞ்சிய, 30 சதவீத கடன் பிரச்னைக்குத் தான் தற்போது தீர்வு காண வேண்டும்.
–இன்ஜெட்டி ஸ்ரீநிவாஸ்,மத்திய நிறுவன விவகாரங்கள் துறை செயலர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)