டி.வி.எஸ்., பைக்கில் புதிய தொழில்நுட்பம் டி.வி.எஸ்., பைக்கில் புதிய தொழில்நுட்பம் ... 5 பொது துறை வங்கிகளுக்கு ரூ.21,428 கோடி; பங்கு மூலதனம் வழங்க மத்திய அரசு முடிவு 5 பொது துறை வங்கிகளுக்கு ரூ.21,428 கோடி; பங்கு மூலதனம் வழங்க மத்திய அரசு முடிவு ...
வாகன காப்பீட்டு பிரிமியத்தில் மாற்றமில்லை; காப்பீட்டு ஒழுங்கு முறை ஆணையம் அறிவிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மார்
2019
00:07

மும்பை: ‘அடுத்த நிதியாண்டிற்கான, மூன்றாம் நபர் வாகன காப்பீட்டு பிரிமியத்தில் மாற்றம் ஏதும் இல்லை’ என, காப்பீட்டு ஒழுங்கு முறை ஆணையம் தெரிவித்து உள்ளது.

இவ்வாணையம், ஒவ்வொரு நிதியாண்டிற்கும், மூன்றாம் நபர் வாகன காப்பீட்டு பிரிமியத்தை நிர்ணயிக்கிறது.கார்வாகன மாடல் மற்றும் இன்ஜின் திறன் ஆகியவற்றின் அடிப்படையில், மூன்றாம் நபர் வாகன காப்பீட்டு பிரிமியம், ஆண்டுக்கு, 10 – -20 சதவீதம் உயர்த்தப்படுவது வழக்கம்.எதிர்பாராத விபத்து, திருட்டு போன்றவற்றின் போது, வாகன ஓட்டுனர்களின் நிதி பாதுகாப்பிற்கு, இக்காப்பீடு உதவுகிறது.

இதன்படி, வரும், ஏப்., 1ல் துவங்கும், 2019 – -20ம் நிதியாண்டிற்கான, மூன்றாம் நபர் வாகன காப்பீட்டிற்கான பிரிமியத்தில் எந்த மாற்றமும் இல்லை என, காப்பீட்டு ஒழுங்கு முறை ஆணையம் அறிவித்துள்ளது.கடந்த ஆண்டு, 1,000 சி.சி., திறனுக்கு குறைவான இன்ஜின் பொருத்தப்பட்ட கார்களுக்கான, மூன்றாம் நபர் காப்பீட்டு பிரிமியம் குறைக்கப்பட்டது.

நீதிமன்றம் உத்தரவுஅதேசமயம், 1,000 சி.சி., திறனுக்கு மேற்பட்ட கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கான மூன்றாம் நபர் வாகன காப்பீட்டு பிரிமியம் உயர்த்தப்பட்டது.புதிய வாகனங்களுக்கு, ஓராண்டிற்கு பதிலாக, நீண்ட கால மூன்றாம் நபர் காப்பீட்டு வசதி வழங்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, 2018, ஆக., 1 முதல், புதிய கார்களுக்கு மூன்று ஆண்டுகள்; இரு சக்கர வாகனங்களுக்கு, ஐந்து ஆண்டுகளுக்கான மூன்றாம் நபர் விபத்து காப்பீட்டு வசதி அமலானது. இதனால், புதிய வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டு பிரிமியம், 2 – -5 மடங்கு உயர்ந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)