பதிவு செய்த நாள்
30 மார்2019
00:07
மும்பை: ‘அடுத்த நிதியாண்டிற்கான, மூன்றாம் நபர் வாகன காப்பீட்டு பிரிமியத்தில் மாற்றம் ஏதும் இல்லை’ என, காப்பீட்டு ஒழுங்கு முறை ஆணையம் தெரிவித்து உள்ளது.
இவ்வாணையம், ஒவ்வொரு நிதியாண்டிற்கும், மூன்றாம் நபர் வாகன காப்பீட்டு பிரிமியத்தை நிர்ணயிக்கிறது.கார்வாகன மாடல் மற்றும் இன்ஜின் திறன் ஆகியவற்றின் அடிப்படையில், மூன்றாம் நபர் வாகன காப்பீட்டு பிரிமியம், ஆண்டுக்கு, 10 – -20 சதவீதம் உயர்த்தப்படுவது வழக்கம்.எதிர்பாராத விபத்து, திருட்டு போன்றவற்றின் போது, வாகன ஓட்டுனர்களின் நிதி பாதுகாப்பிற்கு, இக்காப்பீடு உதவுகிறது.
இதன்படி, வரும், ஏப்., 1ல் துவங்கும், 2019 – -20ம் நிதியாண்டிற்கான, மூன்றாம் நபர் வாகன காப்பீட்டிற்கான பிரிமியத்தில் எந்த மாற்றமும் இல்லை என, காப்பீட்டு ஒழுங்கு முறை ஆணையம் அறிவித்துள்ளது.கடந்த ஆண்டு, 1,000 சி.சி., திறனுக்கு குறைவான இன்ஜின் பொருத்தப்பட்ட கார்களுக்கான, மூன்றாம் நபர் காப்பீட்டு பிரிமியம் குறைக்கப்பட்டது.
நீதிமன்றம் உத்தரவுஅதேசமயம், 1,000 சி.சி., திறனுக்கு மேற்பட்ட கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கான மூன்றாம் நபர் வாகன காப்பீட்டு பிரிமியம் உயர்த்தப்பட்டது.புதிய வாகனங்களுக்கு, ஓராண்டிற்கு பதிலாக, நீண்ட கால மூன்றாம் நபர் காப்பீட்டு வசதி வழங்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, 2018, ஆக., 1 முதல், புதிய கார்களுக்கு மூன்று ஆண்டுகள்; இரு சக்கர வாகனங்களுக்கு, ஐந்து ஆண்டுகளுக்கான மூன்றாம் நபர் விபத்து காப்பீட்டு வசதி அமலானது. இதனால், புதிய வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டு பிரிமியம், 2 – -5 மடங்கு உயர்ந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|