பதிவு செய்த நாள்
31 மார்2019
02:17
‘ஜிம் – 2’ எனும், இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், ஒப்பந்தம் செய்த நிறுவனங்களுக்கான நோடல் அதிகாரிகளிடம், ஒப்பந்த நகல் வழங்கப்பட்டு, நிறுவனத்தின் கோரிக்கைகளும் பட்டியலிடப்பட்டுள்ளதாக, தொழில் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு சார்பில், நடைபெற்ற இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், 304 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம், 3 லட்சத்து, 431 கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டது.புரிந்துணர்வு செய்துள்ள நிறுவனங்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சமீபத்தில் நியமிக்கப்பட்டனர். தற்போது அவர்களிடம், நிறுவனங்களின் பிரச்னைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
இது குறித்து, தொழில் துறை அதிகாரிகள் கூறியதாவது:ஜிம் – 2 மாநாட்டில், 140க்கும் மேற்பட்ட பெரு நிறுவனங்கள், தமிழகத்தில் தொழில் துவங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன. தற்போது அனைத்து, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளிடமும், புரிந்துணர்வு ஒப்பந்த நகல் வழங்கப்பட்டுள்ளது. நிறுவனங்களிடமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து நிறுவனங்களும், பிரச்னைகளையும் தெரிவித்துள்ளன. அவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|