பதிவு செய்த நாள்
31 மார்2019
02:24
புதுடில்லி:மூலப் பொருட்கள் விலை உயர்வால், பயணியர் மற்றும் வர்த்தக வாகனங்கள் விலையை, தயாரிப்பு நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.
‘டாடா மோட்டார்ஸ், மகிந்திரா அண்டு மகிந்திரா, டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்’ உள்ளிட்ட பல நிறுவனங்கள் அறிவித்துள்ள இந்த விலை உயர்வு, நாளை அமலுக்கு வருகிறது.அலுமினியம்இது குறித்து, மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனத்தின், வாகன பிரிவு தலைவர், ராஜன் வதேரா கூறியதாவது:அலுமினியம், உருக்கு, தாமிரம் ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது. இதனால், வாகன தயாரிப்பு நிறுவனங்களின் மூலப் பொருட்கள் செலவினம், இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது.
இதையொட்டி, சில நிறுவனங்கள் இந்தாண்டு ஜனவரியில், வாகனங்கள் விலையை, 4 – 5 சதவீதம் அதிகரித்தன.கடந்த மூன்று மாதங்களில், மூலப் பொருட்கள் விலை குறையும் அறிகுறிகள் இல்லாததால், சில நிறுவனங்கள் மீண்டும் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளன.மகிந்திரா, பயணியர் மற்றும் வர்த்தக வாகனங்கள் விலையை, 0.5 – 2.7 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. இதன்படி நாளை, நிறுவனத்தின் வாகனங்கள் விலை, 5,000 – 73 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய விதிமுறைகள்என்.ராஜா, நிர்வாக இயக்குனர், டொயோட்டா கிர்லோஸ்கர்:கூடுதல் செலவினங்களை சமாளிக்க, தயாரிப்பு செலவை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எனினும், தொடர்ந்து மூலப் பொருட்கள் விலை உயர்ந்து வருவதால், அதில் ஒரு பகுதியை, நுகர்வோரிடம் சுமத்தும் நோக்கில், வாகன விற்பனை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.ஏப்., 1 முதல், வாகன துறையில் புதிய விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. இதன்படி, தில்லுமுல்லு செய்ய முடியாத வாகன நம்பர் பிளேட் பொருத்துவது, ‘ஏ.பி.எஸ்., பிரேக் சிஸ்டம்’ ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இதுவும், வாகன தயாரிப்பு செலவு அதிகரிக்க காரணம்.இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த ஆறு மாதங்களாக, வாகன விற்பனை மந்தமாக உள்ளது. இந்நிலையில், விலை உயர்வு, வாகன துறையை கடுமையாக பாதிக்கும். எனினும், சில நிறுவனங்கள் அதிரடி சலுகைகளை அறிவித்து, விற்பனையை அதிகரிக்க முயற்சிக்கும் என, சந்தையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தேக்கம் அதிகரிப்புஉலகில், அதிக அளவில் வாகனங்களை தயாரிக்கும் நாடுகளில், இந்தியாவும் ஒன்று. இங்கு, ஆண்டுக்கு, 2.40 கோடி வாகனங்கள் தயாரிக்கப்படுகின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தியில், வாகன துறை, 7.1 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. தயாரிப்பு துறையில், வாகனப் பிரிவின் பங்கு, 49 சதவீதமாக உள்ளது.கடந்த பிப்ரவரியில், உள்நாட்டில், வாகனங்களின் சில்லரை விற்பனை, 8.1 சதவீதம் குறைந்து, 15.8 லட்சமாக சரிவடைந்துள்ளது.முகவர்களிடம், விற்பனை அடிப்படையிலான, பயணியர் கார்களின் தேக்கம், 50 – 60 நாட்களாக அதிகரித்துள்ளது. இந்த தேக்கம், இரு சக்கர வாகனங்களில், 80 – 90 நாட்கள்; ஒரு சில முகவர்களிடம், 100 நாட்கள் என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|