புதிய தொழில் கொள்கை தேர்தலுக்கு பின் வெளியீடு:உற்பத்தி, ஏற்றுமதி, முதலீட்டை அதிகரிக்க நடவடிக்கை புதிய தொழில் கொள்கை தேர்தலுக்கு பின் வெளியீடு:உற்பத்தி, ஏற்றுமதி, ... ...  மார்ச் மாத வருவாய்  150 சதவீதம் உயர்வு மார்ச் மாத வருவாய் 150 சதவீதம் உயர்வு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
லட்சுமி விலாஸ் வங்கியை கையகப்படுத்தியது இந்தியா புல்ஸ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஏப்
2019
23:28

மும்பை:மும்பையைச் சேர்ந்த, வீட்டு வசதி கடன் நிறுவனமான, இந்தியா புல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ், சென்னையைச் சேர்ந்த, லட்சுமி விலாஸ் வங்கியை கையகப்படுத்தியுள்ளது. இது தொடர்பான தீர்மானத்திற்கு, இரு தரப்பு இயக்குனர்கள் பங்கேற்ற கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.


அடுத்து, பங்கு முதலீட்டாளர்கள், ரிசர்வ் வங்கி, ‘செபி’ உள்ளிட்ட அமைப்புகளின் ஒப்புதலுக்கு பின், ‘இந்தியா புல்ஸ் லட்சுமி விலாஸ் வங்கி’ என்ற பெயரில் செயல்படும். முதலீட்டாளர்களுக்கு, லட்சுமி விலாஸ் வங்கியின், 100 பங்குகளுக்கு, இந்தியா புல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின், 14 பங்குகள் வழங்கப்படும்.இந்த வகையில், முதலீட்டாளர்களுக்கு, லட்சுமி விலாஸ் வங்கி பங்கின் விலையை விட, 40 சதவீதம் அதிகம் கிடைக்கும்.


தமிழகத்தில், கரூரில், வி.எஸ்.என்.ராமலிங்க செட்டியார் தலைமையில், 1926ல், லட்சுமி விலாஸ் வங்கி உருவானது. கடந்த, 2014ல், இவ்வங்கியின் தலைமையகம், சென்னைக்கு மாற்றப்பட்டது.சந்தை போட்டி காரணமாக, கடன்களை வாரி வழங்கியதால், இவ்வங்கியின் வாராக் கடன் அதிகரித்தது.


தொடர்ந்து ஐந்து காலாண்டுகளாக இழப்பை சந்தித்து வந்த இவ்வங்கி, சரிவடைந்த மூலதன இருப்பு விகிதத்தை சமாளிக்க, சில தினங்களுக்கு முன், தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு பங்குகளை ஒதுக்கியது.இத்தகைய நெருக்கடியான தருணத்தில், இவ்வங்கிக்கு, இந்தியா புல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் கைகொடுத்துள்ளது.


இதையடுத்து, லட்சுமி விலாஸ் வங்கியின் தலைமையகம், மும்பைக்கு மாற்றப்படும் என, தெரிகிறது.இந்தியா புல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் தலைவர், சமீர் கெலாட், ஒருங்கிணைந்த புதிய வங்கியின் துணைத் தலைவராக பொறுப்பேற்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)