பதிவு செய்த நாள்
06 ஏப்2019
23:35
நாமக்கல்:உற்பத்தி, 10 சதவீதம் குறைவால், தேவை அதிகரித்துள்ளது. அதன் காரணமாக, முட்டை கொள்முதல் விலை உயர்ந்து வருகிறது. இது, மேலும் உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த, 1ல், 342; 4ல், 345 என, உயர்ந்த கொள்முதல் விலை, நேற்று, 5 காசு உயர்த்தப்பட்டு, 350 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. இது குறித்து, தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர் கள் சம்மேளன துணைத் தலைவர், வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:தற்போது, ஈஸ்டர் விரதம் கடைப்பிடிப்பதால், நுகர்வு சரிந்துள்ளது. மேலும், வரலாறு காணாத தீவனம் விலை உயர்வு காரணமாகவும், தண்ணீர் பற்றாக்குறையாலும், உற்பத்தி குறைந்துள்ளது.
கடந்த ஒரு வாரமாக, உற்பத்தி, 10 சதவீதம் சரிந்துள்ளது. அதாவது, தினமும், 35 லட்சம் முட்டை உற்பத்தி குறைந்துள்ளது. அதனால், தேவை அதிகரித்துள்ளது.இதையடுத்து, கொள்முதல் விலை உயர்ந்து வருகிறது. இன்னும் இரண்டு வாரத்தில், 50 காசு வரை உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|