லாப தடுப்பு ஆணையம்: குவியும் கடிதங்கள் லாப தடுப்பு ஆணையம்: குவியும் கடிதங்கள் ...  ‘கடைக்கோடி மனிதரையும் சீர்திருத்தம் சேர வேண்டும்’முதலீட்டாளர்கள் கருத்தரங்கில் அருண் ஜெட்லி உரை ‘கடைக்கோடி மனிதரையும் சீர்திருத்தம் சேர வேண்டும்’முதலீட்டாளர்கள் ... ...
தள்ளுபடிக்காக சுய தகவல்களை தரும் இந்தியர்கள்ஆக்செஞ்சுர் நிறுவன ஆய்வறிக்கை கூறுகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஏப்
2019
23:39

புதுடில்லி:இந்திய நுகர்வோர், தள்ளுபடி சலுகைகள், தனிப்பட்ட சேவைகள் போன்றவற்றுக் காக, தங்களைப் பற்றிய அனைத்து தகவல்களையும், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்குவதாக, ஆக்செஞ்சுர் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதன் விபரம்:உலகிலேயே, இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்த, நுகர்வோர் தான், தங்களை பற்றிய அனைத்து தகவல்களையும் அதிக அளவில் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றனர்.


கட்டண சலுகை


நிதி நிறுவனங்களிடம், பிரத்யேக சேவைகளுக்காக, சுய விபரங்களை அளிப்போரின் எண்ணிக்கை, இந்தியாவில், 67 சதவீதம்; சீனாவில், 69 சதவீதமாக உள்ளது.வங்கி, காப்பீட்டு நிறுவனம் ஆகியவற்றின் திட்டங்களில், தள்ளுபடி மற்றும் சலுகைகளை பெறுவதற்காக, இந்தியாவில், 10க்கு, ஏழு பேர், தங்களைப் பற்றிய முக்கிய தகவல்களை வழங்க தயாராக உள்ளனர்.இந்திய நுகர்வோரில், மூன்றில் இரு பங்கினர், கடனுக்கு ஒப்புதல் பெறவும், உடற் பயிற்சி கூடங்களில் கட்டணச் சலுகை கிடைக்கவும், தனிப்பட்ட சேவைகளுக்காகவும், தாங்கள் வசிக்கும் இடம் குறித்த தகவலை அளிக்க முன்வருகின்றனர்.


அதேசமயம், தங்களின் தகவல் பாதுகாப்பு மிகவும் முக்கியம் என, பெரும்பாலானோர் கருது கின்றனர். ஐந்தில், நான்கு பேர், அதாவது, 81 சதவீதத்தினர், தங்கள் தனிப்பட்ட விபரங்களின் பாதுகாப்பு குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதாக தெரிவித்துஉள்ளனர்.புகார்களுக்கு விரைவாக தீர்வு காணவும், தகவல் மோசடி தொடர்பாகவும், வங்கி, காப்பீட்டு நிறுவனங்கள் ஆகியவற்றுடன், பலர் சுய விபரங்களை பகிர்ந்து கொள்கின்றனர்.


வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ளவும், குறிப்பிட்ட சேவைகள் மற்றும் சலுகைகளை எதிர்பார்த்தும், இந்திய நுகர்வோர், தங்களை பற்றிய தகவல்களை வழங்குவது ஆய்வில் தெரியவந்துள்ளது.நுகர்வோரில், 92 சதவீதம் பேர், எதிர்பாராத இழப்பினால் ஏற்படும் பாதிப்பு குறையும் என்ற நோக்கத்தில், தங்கள் வருவாய், இருப்பிடம், வாழ்க்கை பாணி உள்ளிட்ட தனிப்பட்ட விபரங்கள் அனைத்தையும், காப்பீட்டு நிறுவனங்களுக்கு தெரிவிக்கின்றனர்.


தள்ளுபடி சலுகை


அதுபோல, 93 சதவீதம் பேர், கடன் விண்ணப்பங்களுக்கு விரைவாக அனுமதி பெறுவதற்காக, வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகியவற்றிடம், தங்கள் வருவாய், இருப்பிடம், வாழ்க்கை பாணி உள்ளிட்ட விபரங்களை வழங்குகின்றனர்.தங்கள் இருப்பிடம் சார்ந்த, பிரத்யேக சேவைகளை பெறவும், சில்லரை விற்பனையாளரிடம் தள்ளுபடி சலுகைகளை கோரவும், 91 சதவீதம் பேர், தங்கள் வருவாய், இருப்பிடம் உள்ளிட்ட விபரங்களை தருகின்றனர்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


உலகளவில், 27 நாடுகளைச் சேர்ந்த, 47ஆயிரம் நுகர்வோரிடம், தனி நபர் தகவல் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவில், 2,000 நுகர்வோர்கள், இந்த ஆய்வில் பங்கேற்று, கருத்து தெரிவித்தனர்.

ஆக்செஞ்சுர் சர்வதேச நிதிச் சேவைகள் நுகர்வோர் ஆய்வறிக்கை

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)