எஸ்.பி.ஐ., லைப் வணிகம் ரூ.13.792 கோடி எஸ்.பி.ஐ., லைப் வணிகம் ரூ.13.792 கோடி ...  கே.ஒய்.சி., தாக்கல் செய்யாத நிறுவனங்கள்: ஜூன் 15 வரை அவகாசம் நீட்டிப்பு கே.ஒய்.சி., தாக்கல் செய்யாத நிறுவனங்கள்: ஜூன் 15 வரை அவகாசம் நீட்டிப்பு ...
ஐ.ஜி.எஸ்.டி., பயனை ஜி.எஸ்.டி.,யில் சரி செய்யலாம்: மத்திய மறைமுக மற்றும் சுங்க வரி வாரியம் அறிவிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஏப்
2019
00:33

புதுடில்லி: நிறுவனங்கள், ‘ஐ.ஜி.எஸ்.டி.,’யில் பெறும் உள்ளீட்டு வரிப் பயனை, மத்திய, மாநில ஜி.எஸ்.டி., நிலுவைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என, ‘சி.பி.ஐ.சி.,’ எனப்படும், மத்திய மறைமுக மற்றும் சுங்க வரி வாரியம் தெரிவித்துள்ளது.

சி.பி.ஐ.சி., அறிவிப்பு
இது குறித்து, அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:நிறுவனங்கள், இறக்குமதி செய்யும் மூலப் பொருட்களுக்கும், மாநிலங்கள் இடையிலான பொருட்கள் விற்பனைக்கும், ‘ஐ.ஜி.எஸ்.டி.,’ன் கீழ் வரி செலுத்துகின்றன.அதில் கிடைக்கும் உள்ளீட்டு வரிப் பயனை, நிறுவனங்கள் திரும்பப் பெறுகின்றன.இந்நிலையில், ‘ஐ.ஜி.எஸ்.டி.,யில் சேகரமாகும் உள்ளீட்டு வரிப் பயனை, மத்திய, மாநில அரசுகளுக்கு செலுத்தும், ‘சி.ஜி.எஸ்.டி., மற்றும் எஸ்.ஜி.எஸ்.டி.,’யில் கழித்துக் கொள்ளலாம்’ என, கடந்த மாதம், ‘சி.பி.ஐ.சி.,’ அறிவித்தது.

குழப்பம் தீர்ந்தது
எனினும், உள்ளீட்டு வரிப் பயனை, முதலில், ஐ.ஜி.எஸ்.டி., நிலுவைக்கு பயன்படுத்த வேண்டும் என்றதால், குழப்பம் நிலவியது.அதை தீர்க்கும் வகையில், சி.பி.ஐ.சி.,யின் அறிக்கை அமைந்துள்ளது. அதன்படி, இறக்குமதி நிறுவனங்கள், ஐ.ஜி.எஸ்.டி.,யில் பெறும் உள்ளீட்டு வரிப் பயனை, மத்திய, மாநில அரசுகளின், சி.ஜி.எஸ்.டி., மற்றும் எஸ்.ஜி.எஸ்.டி., நிலுவைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.அதுபோல, மாநிலங்கள் இடையிலான சரக்கு விற்பனையில் செலுத்தும், ஐ.ஜி.எஸ்.டி.,யில் பெறும் உள்ளீட்டு வரிப் பயனையும், மத்திய, மாநில அரசுகளின், வரி நிலுவைக்கு பயன்படுத்தலாம்.அதனால், உள்ளீட்டு வரிப் பயனை திரும்பப் பெறுவதற்கு தகுதியற்ற நிறுவனங்களின் தொகை மட்டுமே, ஐ.ஜி.எஸ்.டி., யில் சேகரமாகும்இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)