பதிவு செய்த நாள்
30 ஏப்2019
23:12
ஈரோடு : ஈரோடு ஜவுளி சந்தையில், கோடை கால ஆடை விற்பனை, சுறுசுறுப்பு அடைந்துள்ளது.
தமிழகம் முழுவதும் தயாரிக்கப்படும் பின்னலாடை, உள்ளாடை ரகங்கள், லுங்கிகள், பருத்தி உடைகள், ஈரோடு ஜவுளி சந்தையில், மொத்த விலையில் விற்கப்படுகிறது. லோக்சபா தேர்தல் நடத்தை விதியால், கடந்த மாதம், சந்தையில் ஜவுளி விற்பனை மந்தமாகவே இருந்தது. தேர்தல் முடிந்த நிலையில், நேற்றைய சந்தைக்கு கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களைச் சேர்ந்த, மொத்த வியாபாரிகள், தமிழகத்தை சேர்ந்த சில்லரை வியாபாரிகள் அதிகம் வந்தனர். கோடை காலத்துக்கு ஏற்ற, பருத்தி ஆடை உள்ளிட்ட ஜவுளி ரகங்களை, அதிகம் வாங்கி சென்றனர்.
இது குறித்து, ஈரோடு கனி மார்க்கெட் ஜவுளி வியாபாரிகள் சங்க தலைவர், செல்வராஜ் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டம் நத்தம், துாத்துக்குடி மாவட்டம் குனியமுத்துார் பகுதியில் இருந்து, பெண்களுக்கான காட்டன் நைட்டி, பாவாடை, ஆண்களுக்கான சட்டை, லுங்கிகள், குழந்தைகளுக்கான பிராக், கவுன் ஆகியவற்றை கொள்முதல் செய்கிறோம். தேர்தல் முடிந்த பின், இந்த வாரம்தான் மொத்த மற்றும் சில்லரை வியாபாரிகள் அதிகம் வந்தனர். இதனால், 60 சதவீதம் ஜவுளி ரகம் விற்பனையானது. பள்ளி, கல்லுாரி கோடை விடுமுறையால், சில்லரை விற்பனை குறைவாகத்தான் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|