‘இ – வே’ பில்: கிடுக்கிப்பிடி சோதனை ‘இ – வே’ பில்: கிடுக்கிப்பிடி சோதனை ...  4 ‘ஆடிட்’ நிறுவனங்கள் சட்ட சேவைக்கு தடை 4 ‘ஆடிட்’ நிறுவனங்கள் சட்ட சேவைக்கு தடை ...
லண்டனில் குவியும் இந்தியர்கள் முதலீடு:ஓராண்டில், 255 சதவீதம் அதிகரித்து, புதிய சாதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மே
2019
00:07

லண்டன்:கடந்த ஆண்டு, இந்தியாவில் இருந்து அதிக அளவிலான அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்களை ஈர்த்த நாடுகளில், பிரிட்டன் முதலிடத்தை பிடித்துள்ளது.


பிரிட்டன் தலைநகர் லண்டனில், மேயரின், அதிகாரபூர்வ சர்வதேச வர்த்தக மேம்பாட்டு பணிகளை, ‘லண்டன் அண்டு பார்ட்னர்ஸ்’ நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.இந்நிறுவனம், 2018ல், பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட, அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்கள் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.



அதில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த ஆண்டு, இந்தியாவில் இருந்து அதிக அளவில், அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்களை ஈர்த்த நாடுகளில், பிரிட்டன் முதலிடத்தை பிடித்துள்ளது.இந்த வகையில், 2018ல், இந்திய முதலீட்டாளர்களின், 52 திட்டங்கள் தொடர்பான ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளன. இது, 2017ல் மேற்கொண்டதை விட, 100 சதவீதம் அதிகம்.


இந்தியர்கள், அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சில், முறையே, 51 மற்றும் 32 திட்டங்களில் முதலீடு செய்துள்ளனர்.இந்தியாவில் இருந்து, பிரிட்டன் ஈர்த்த அன்னிய முதலீடுகளில், லண்டன் நகரம், 60 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. இந்நகரில், பல்வேறு துறைகளில், இந்தியர்களின் முதலீடு, ஓராண்டில், 255 சதவீதம் அதிகரித்து, புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.



இது வரை இல்லாத வகையில், இந்தியர்கள், லண்டனில், 32 திட்டங்களில் முதலீடு செய்துள்ளனர். அவர்கள், துபாய் மற்றும் சிங்கப்பூரில் செய்த முதலீடு, இதை விட குறைவாகும்.இந்திய நிறுவனங்கள், லண்டனை மையமாக வைத்து, சர்வதேச வர்த்தகத்தை விரிவுபடுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றன.இதன் காரணமாக, லண்டனில், இந்தியர்களின் முதலீடு அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப, லண்டனில், நிதிச் சேவைகள், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில், வர்த்தக வாய்ப்பு நன்கு உள்ளது.கடந்த, 10 ஆண்டுகளில், லண்டனில் உள்ள இந்திய நிறுவனங்கள், 249 கோடி பவுண்டு, அதாவது, 22 ஆயிரத்து, 400 கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளன; அத்துடன், 5,691 புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளன.


இந்தியாவில், வலைதளம் மூலம் வாடகை கார் சேவை வழங்கும், ‘ஓலா’ நிறுவனம், கடந்த ஆண்டு, லண்டனில் முதலீடு செய்யும் திட்டத்தை அறிவித்தது.ஓட்டல் அறை சேவையை வழங்கும், ‘ஓயோ’ நிறுவனம், லண்டனில் முதலீடு செய்ய உள்ளதாக, சமீபத்தில் தெரிவித்துள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



தொழிலதிபர்கள் குழு வருகை



லண்டன் மேயரின் சர்வதேச வர்த்தக மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பிரிட்டன் தொழிலதிபர்கள் குழு, பரஸ்பர வர்த்தக வாய்ப்புகளை அறிய, நான்கு நாள் பயணமாக, 6ம் தேதி இந்தியா வருகிறது; சென்னை, பெங்களூரு, மும்பை நகரங்களில், இந்திய தொழிலதிபர்களை சந்தித்து பேச உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)