பிரிட்டானியா நிறுவனம் பங்கு சந்தை விதிமீறல்:வாடியா கைதானதை மறைத்ததாக குற்றச்சாட்டு பிரிட்டானியா நிறுவனம் பங்கு சந்தை விதிமீறல்:வாடியா கைதானதை மறைத்ததாக ... ...  தனி இயக்குனருக்கு மின்னணு பதிவு கட்டாயம் நிறுவன முறைகேட்டில் பொறுப்பை தட்டிக்கழிக்க முடியாது தனி இயக்குனருக்கு மின்னணு பதிவு கட்டாயம் நிறுவன முறைகேட்டில் பொறுப்பை ... ...
‘ஜெட் ஏர்வேசுக்கு ரூ.250 கோடி தர தயார்!’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மே
2019
23:22

புதுடில்லி:கடன் நெருக்கடியால், விமான சேவையை நிறுத்தியுள்ள, ‘ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனத்திற்கு, 250 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக, அந்நிறுவனத்தின் நிறுவனர், நரேஷ் கோயல் தெரிவித்துள்ளார்.



இது குறித்து அவர், ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:கடன் கொடுத்த வங்கிகள் கூட்டமைப்பு வலியுறுத்தியதை அடுத்து, நானும், என் மனைவியும், ஜெட் ஏர்வேஸ் இயக்குனர் பொறுப்பில் இருந்து வெளியேறினோம்.நம் ஜெட் ஏர்வேஸ் குடும்பத்தினரின் நலனுக்காக, என்னால் முடிந்தவரை அனைத்து வகை தியாகங்களையும் செய்து உள்ளேன்.



தற்போது, அந்நிறுவனத்திற்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.எனினும், நிறுவன ஊழியர்களின் ஊதிய நிலுவையை வழங்கவும், மீண்டும் ஜெட் ஏர்வேஸ் விமான சேவையை இயக்கவும், 250 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கிறேன்.இதை, தற்போது ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை நிர்வகிக்கும், கடன் வழங்கிய வங்கிகள் கூட்டமைப்பிற்கு அளிக்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், 8,000 கோடி ரூபாய் கடனில் சிக்கியுள்ளது.இந்நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இருந்து, நரேஷ் கோயல் வெளியேறியதை அடுத்து, கடன் கொடுத்த, எஸ்.பி.ஐ., தலைமையிலான, வங்கிகள் கூட்டமைப்பு வசம், நிறுவனத்தின், 51 சதவீத பங்குகள் வந்தன. புதிய இயக்குனர் குழுவும் அமைக்கப்பட்டது.எனினும், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின், 75 சதவீத பங்குகளை விற்க முடியாததால், வங்கிகள் கூட்டமைப்பு உறுதி அளித்தபடி, 1,500 கோடி ரூபாய் முதலீடு செய்யவில்லை.




இந்நிலையில், குத்தகை நிறுவனங்கள், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு அளித்த பெரும்பாலான விமானங்களை, திரும்பப் பெற்றுக் கொண்டன. இதனால், ஜெட் ஏர்வேஸ் விமான சேவை, ஏப்., 17ம் தேதி நள்ளிரவுடன், தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. இந்நிறுவனத்தின் ஊழியர்களுக்கு, ஜனவரி முதல் ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது.



நரேஷ் கோயல் உதவியால், அவர்களுக்கு பகுதி ஊதியமாவது கிடைக்கும் என, தெரிகிறது. இதனிடையே நேற்று, ஜெட் ஏர்வேஸ் நிறுவன பங்குகளை வாங்க, முதன் முதலாக, இரு வெளிநாட்டு தொழிலதிபர்கள் அடங்கிய குழு முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)