சீன பொருட்களுக்கு மீண்டும் வரி உயர்வு சமரச பேச்சு முறிவால் அமெரிக்கா அதிரடி சீன பொருட்களுக்கு மீண்டும் வரி உயர்வு சமரச பேச்சு முறிவால் அமெரிக்கா ... ... உங்­கள் வீண் ­செ­ல­வு­களை முத­லீ­டாக மாற்­று­வது எப்­படி? உங்­கள் வீண் ­செ­ல­வு­களை முத­லீ­டாக மாற்­று­வது எப்­படி? ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச் சந்தை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மே
2019
23:50




இந்­திய பங்­குச் சந்­தை­களில், தொடர்ந்து இரண்­டா­வது வார­மாக, சரி­வில் வர்த்­த­கம் நடை­பெற்று முடி­வுற்­றது. மும்பை பங்­குச் சந்தை குறி­யீட்டு எண், சென்­செக்ஸ், 2,000 புள்­ளி­களும், தேசிய பங்­குச் சந்தை குறி­யீட்டு எண், நிப்டி, 400 புள்­ளி­களும் கடந்த வாரம் சரிந்­தன. கடந்த, ஏழு மாதங்­க­ளுக்­குப் பிறகு ஏற்­பட்ட மிகப் பெரிய வாரச் சரிவு இதுவே ஆகும்.

நடந்து கொண்­டி­ருக்­கும் லோக்­சபா தேர்­த­லில், ஆறாம் கட்ட ஓட்­டுப் பதிவு முடி­வ­டைந்­துள்ள நிலை­யில், இம்­மா­தம், 23ம் தேதி, தேர்­தல் முடி­வு­கள் வெளி­வர உள்ளன.கடந்த ஏப்­ரல் மாதத்­தில் தேர்­தல் துவங்­கிய நிலை­யில், தேர்­த­லுக்கு முன் வந்த கருத்­துக் கணிப்­பு­களில், ஆளும் மத்­திய, பா.ஜ., அரசு, மீண்­டும் பெரும்­பான்மை பெற்று ஆட்சி அமைக்­கும் என்ற கருத்து வெளிப்­பட்­டது. இது, சந்­தை­களின் சாத­க­மான போக்­கிற்கு வழி­வ­குத்­தது.

மூன்று, நான்கு மற்­றும் ஐந்­தாம் கட்ட ஓட்­டுப் பதி­வுக்­குப் பின், தற்­போது எதிர்­மா­றான கருத்து நிலவி வரு­கிறது. யாருக்­கும் பெரும்­பான்மை கிடைக்­கா­மல் போக­லாம் என்ற சூழலே உள்­ள­தாக கருத்­து­கள் வரு­கின்றன. இது, பங்­குச் சந்­தை­களின் பாத­க­மான போக்­கிற்கு வழி­கோ­லி­யது. மேலும், கடந்த பல மாதங்­க­ளாக நிலவி வந்த, அமெ­ரிக்கா – சீனா இடை­யே­யான வர்த்­தக மோதல், மேலும் அதி­க­ரிக்­கும் சூழல் உரு­வாகி உள்­ளது.


அதி­கா­ரி­கள் மற்­றும் நிர்­வா­கி­கள் மட்­டத்­தில், இரு நாடு­க­ளுக்கு இடையே நடை­பெற்ற கலந்­தா­லோ­சனை கூட்­டத்­தில், சுமுக முடி­வு­கள் எது­வும் எட்­டப்­ப­ட­வில்லை.இந்த சூழ­லில், கடந்த வெள்ளி அன்று, சீனா­வில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் பொருட்­க­ளுக்­கான வரியை, அமெ­ரிக்கா, 25 சத­வீ­தம் அதி­க­ரித்­துள்­ளது; 200 பில்­லி­யன் டாலர் மதிப்­பி­லான புதிய இறக்­கு­மதி வரியை, அமெ­ரிக்கா விதித்­துள்­ளது.


இந்த அசா­தா­ரண சூழல் கார­ண­மாக, உல­கின் அனைத்து பொரு­ளா­தார வளர்ச்­சி­யும் குறை­யும் என்ற நிலை உரு­வாகி இருக்­கிறது. இதன் கார­ண­மாக பங்­குச் சந்­தை­கள் வீழ்ச்சி அடைந்து, வர்த்­த­கம் நடை­பெற்று வரு­கின்றன.கடந்த சில மாதங்­க­ளா­கவே, இந்­தி­யா­வின் வாகன விற்­பனை, கடும் சரிவை சந்­தித்து வரு­கிறது. பய­ணி­யர் மற்­றும் கன­ரக வாக­னங்­களின் விற்­பனை சரிந்து வரு­கிறது. நுகர்­வோ­ரின் வாங்­கும் திறன் குறைந்து, பண­வீக்­கம் அதி­க­ரித்து, பொரு­ளா­தார மந்­தம் ஏற்­ப­டக்­கூ­டும் என்ற நிலை தற்­போது உள்­ளது.


மேலும், கடந்த வாரம் வெளி­யான, நாட்­டின் தொழில் துறை உற்­பத்தி குறி­யீடு, 21 மாதங்­க­ளுக்­குப் பின், முதல் முறை­யாக சரி­வைச் சந்­தித்­துள்­ளது. இது, நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்சி மந்த சூழ­லில் போகிறது என்­ப­தற்­கான குறி­யீ­டா­கும்.கடந்த மார்ச் மாதத்­தின் தொழில் துறை வளர்ச்சி குறி­யீடு, 0.1 சத­வீ­தம் சரிந்­துள்­ளது. இது, இதற்கு முந்­தைய ஆண்­டின் இதே மாதத்­தில், 5.3 சத­வீ­தம் உயர்ந்­தி­ருந்­தது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

கடந்த சில மாதங்­க­ளாக, டால­ருக்கு நிக­ரான இந்­திய ரூபா­யின் மதிப்பு, உயர்ந்து வந்­தது. ஆனால், கடந்த வாரம், பங்­குச் சந்­தை­கள் சரிவு மற்­றும் அமெ­ரிக்க நாணய மதிப்­பில் ஏற்­பட்ட மாற்­றங்­கள் கார­ண­மாக, இந்­திய ரூபா­யின் மதிப்பு, 1 சத­வீ­தம் அள­வுக்கு சரிந்­துள்­ளது.இந்த வாரத்­தைப் பொறுத்­த­வரை, முக்­கிய பொரு­ளா­தார கார­ணி­கள் சில வெளி­வர உள்ளன. இன்று, ஏப்­ரல் மாதத்­தின் சில்­லரை விலை பண­வீக்க விகி­தம் வெளி­வர உள்­ளது. நாளை, மொத்த விலை பண­வீக்க விகி­தம் வரு­கிறது. புத­னன்று, இந்­தி­யா­வின் வர்த்­த­கம் தொடர்­பான பொரு­ளா­தார காரணி வெளி­வர உள்­ளது.


மேலும், இந்த வாரம் சில முன்­னணி நிறு­வ­னங்­களின் காலாண்டு நிதி அறிக்­கை­களும் வர உள்ளன. குறிப்­பாக, ‘ஐ.டி.சி., பஜாஜ் பைனான்ஸ், டாக்­டர் ரெட்டி லேப், ஐ.ஓ.சி., – யு.பி.எல்., ஹிண்­டால்கோ ஹவு­சிங் டெவ­லப்­மென்ட் பைனான்ஸ் கார்ப்­ப­ரே­ஷன்’ போன்ற நிறு­வ­னங்­களின் நிதி நிலை முடி­வு­கள் வரு­கின்றன.இந்த வாரத்­தைப் பொறுத்­த­வரை, நிப்டி சப்­போர்ட், 11,210 மற்­றும் 11,160; ரெசிஸ்­டென்ஸ் 11,400.



முருகேஷ் குமார்

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)