பதிவு செய்த நாள்
12 மே2019
23:53
அதிக பணம் இருந்தால் தான் முதலீடு செய்ய முடியும் என்றில்லை. வருமானத்திற்கு
ஏற்ப திட்டமிட்டு செலவு செய்தால், திட்டமிட்டு முதலீடு செய்யலாம்.
ஆனால், கட்டுப்படுத்த முடியாத செலவு பழக்கம் இதை தடம் புரள
வைக்கலாம். உங்கள் வீண் செலவுகளை கண்டறிந்து, அவற்றையே முதலீடாக
மாற்றிக்கொள்வது மூலம் இந்த பிரச்னையை வெல்லலாம்:
முதலில்
சேமிப்பு:
உங்கள் வருமானத்தில் செலவுகளுக்கு பணம் ஒதுக்கிவிட்டு,
சேமிப்புக்கான தொகையை தீர்மானிக்கிறீர்களா? இதை மாற்றி
அமையுங்கள். முதலில் நிதி இலக்குகளுக்கு ஏற்ப சேமிப்பிற்கான தொகையை தீர்மானித்து, அதற்கேற்ப தொகையை ஒதுக்கிவிடுங்கள். எஞ்சிய தொகையில் செலவுகளை மேற்கொள்ளுங்கள்.
செலவுகளை அறியுங்கள்:
சேமிப்புக்கு முன்னுரிமை அளிக்கும் போது, உங்கள் இலக்குகளுக்கான தொகையை முதலீடு செய்யலாம்.
இப்போது செலவுகளை ஆராயுங்கள். அத்தியாவசிய செலவுகள் தவிர,
தவிர்க்க கூடிய அல்லது தள்ளிப்போடக்கூடிய செலவுகளை
கண்டறியுங்கள். இதன் மூலம்
வீண் செலவுகளை கட்டுப்படுத்தலாம்.
சலுகைகளை நாடுங்கள்:
அத்தியாவசிய செலவுகளைகண்டறிந்த பிறகு, உங்கள் பணம் எந்த வழிகளில்
செலவாகிறது என்பது தெளிவாக புரியும். இவற்றை கட்டுப்படுத்தலாம் என்பதோடு, சரியாக திட்டமிட்டால், சலுகைகள் போன்றவற்றை பயன்படுத்தி, இந்த செலவுகளிலும் சேமிக்கலாம்.
எஸ்.ஐ.பி.,
வழி:
சேமிப்பு முக்கியம் தான். ஆனால், சேமிப்பில் என்ன
செய்கிறீர்கள் என்பது இன்னும் முக்கியம். மாதந்தோறும் சேமிக்கும்
தொகையை சரியாக முதலீடு செய்ய வேண்டும். எஸ்.ஐ.பி., வாயிலாக
மியூச்சுவல் பண்ட்களில் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வதன் மூலம்,
நீண்ட காலபலனை பெறலாம்.
அணி சேருங்கள்:
உங்கள் திட்டத்தை
குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். குடும்பத்தின் நிதி
இலக்குகளை மற்ற உறுப்பினர்களும் புரிந்து கொண்டு செயல்படும் போது,செலவுகளை குறைப்பதில் அவர்களும் ஒத்துழைப்பர்.பிள்ளைகளுக்கும் நிதி விஷயங்களை புரிய வைக்க முடியும். குடும்பமாக சேர்ந்து செலவுகளை கட்டுப்படுத்தலாம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|