பதிவு செய்த நாள்
12 மே2019
23:55
மியூச்சுவல் பண்ட்களில், ‘டெப்ட் பண்ட்’ வகை நிதிகள் தொடர்பான மோசமான செய்திகள், முதலீட்டாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளன.
முதலீட்டாளர்கள் மத்தியில் மியூச்சுவல் பண்ட்கள் தொடர்பான விழிப்புணர்வு, அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் செய்யப்படும் முதலீடுகள் அதிகரித்து வருவது தொடர்பாகவும், புள்ளிவிபரங்கள்
வெளியாக வந்த நிலையில், ‘டெப்ட் பண்ட்’ எனப்படும் கடன்சார் நிதிகள்
பிரச்னை தொடர்பான செய்திகள், முதலீட்டாளர்கள்
மத்தியில் குழப்பத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளன.
டெப்ட் பண்ட்கள் தொடர்ந்து சிக்கலுக்கு உள்ளாவது, இப்போது என்ன செய்வது? என்ற, கேள்வியை எழுப்பியுள்ளது.பல
முதலீட்டாளர்கள் பதற்றம் அடைந்து, முதலீட்டில் இருந்து
வெளியேறுவது சரியாக இருக்குமா என, ஆலோசனை கேட்பதாக மியூச்சுவல்
பண்ட் ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர். டெப்ட் பண்ட் பிரிவில்
சிக்கல் ஏற்பட்டுள்ளது உண்மை தான் என்கின்றனர்.
ஐ.எல்., அண்டு எல்.எஸ்., நிதி நிறுவன பிரச்னையில் இருந்து இது துவங்கியது. இந்நிறுவனத்துடன் தொடர்பு கொண்ட டெப்ட் பண்ட்கள் முதலில் சிக்கலுக்குள்ளாயின. தொடர்ந்து டி.எச்.எப்.எல்., ஜீ குழும பிரச்னை உள்ளிட்டவை மேலும் பாதித்தன. இப்போது யெஸ் பாங்கும் இந்த ரேட்டிங் குறைக்கப்பட வாய்ப்பிருப்பது
மற்றும் பணம் கிடைப்பது தள்ளிப்போகவும் வாய்ப்பிருப்பதாக
சொல்லப்படுவது, முதலீட்டாளர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
முதலீட்டாளர்களின்
பதற்றம் இயற்கையானது தான் என்றாலும், முதலில் அவர்கள் தங்கள்
முதலீடுகளின் நிலையை ஆராய்ந்து புரிந்து கொள்ள வேண்டும்
என்கின்றனர். பிரச்னைக்கு உள்ளான நிறுவனங்களில், நிதிகளின்
முதலீடு அளவை பார்க்க வேண்டும் என்கின்றனர். இதன் அளவு மொத்த
முதலீட்டில் குறைவாக இருந்தால், அதிக பிரச்னை இல்லை என கருதலாம்.
பிரச்சனைக்கு உள்ளான நிறுவனங்களில் கணிசமான முதலீட்டை நிதிகள்
கொண்டிருந்தால், அதன் முதலீட்டாளர்கள் தங்கள் சூழலுக்கு ஏற்ப
முடிவு செய்ய வேண்டும். இது தொடர்பாக தங்கள் ஆலோசகர்களுடன் ஆலோசித்து, முதலீட்டை தொடர்வது பற்றி தீர்மானிக்கலாம்.
இந்த சூழலில் நிதி ஆலோசகர்கள் மற்றொரு முக்கிய விஷயத்தையும் சுட்டிக்காட்டுகின்றனர்.
பெரும்பாலான முதலீட்டாளர்கள் டெப்ட் பண்ட்கள் ரிஸ்கே இல்லாதவை என கருதியதாகவும், அதனால் இப்போதைய பிரச்னைகளால் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். ரிஸ்க் பற்றி அறிந்தவர்கள் கூட, அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.உண்மையில்,
டெப்ட் பண்ட்கள் ரிஸ்க் குறைந்தவையே தவிர, ரிஸ்கே இல்லாதவை அல்ல.
வட்டி விகித ரிஸ்க், கிரெடிட் ரிஸ்க் என அவற்றில் பலவித ரிஸ்க் உண்டு.
கடன்சார் நிதிகளை ரிஸ்கே இல்லாதவை
என நினைத்தவர்கள் தான் அதிக அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த உண்மையை இப்போது சந்தை யதார்த்தம் உணர்த்தியுள்ளது. எனவே பீதி அடையாமல்
முதலீட்டை ஆராய்ந்து பார்த்து முடிவு எடுப்பதே பொருத்தமாக இருக்கும். முதலீட்டாளர்கள்
தாங்கள் தேர்வு செய்துள்ள நிதிகள் மற்றும் அவற்றின் நிலை குறித்து, ஆய்வு செய்ய
வேண்டும்.அச்சத்தின் அடிப்படையில் மட்டுமே முடிவெடுக்காமல், அனைத்து அம்சங்களையும்கவனமாக பரிசிலித்தே முதலீட்டை தொடர்வதா? வெளியேறுவதா? என தீர்மானிக்க வேண்டும்.
புதிய
முதலீட்டாளர்களை பொருத்தவரை, மியூச்சுவல் பண்ட் தொடர்பான
பல்வேறு வகை ரிஸ்க் அம்சங்களை புரிந்து கொண்டு, தங்கள் நிதி
இலக்குகள், முதலீட்டு உத்திகளுக்கு ஏற்ப முடிவு எடுக்க, இந்த சூழல்
ஏற்றதாக இருக்கும்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|