பதிவு செய்த நாள்
14 மே2019
01:01
புதுடில்லி:ஐ.டி.சி., நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக, சஞ்சய் பூரி, 56, நியமிக்கப்பட்டுள்ளார்.இந்நிறுவனத்தின் செயல் சாரா தலைவர், ஒய்.சி.தேவேஷ்வர், கடந்த வார இறுதியில் காலமானார்.
இதைத் தொடர்ந்து, நிர்வாக இயக்குனர், சஞ்சய் பூரிக்கு, தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளதாக, ஐ.டி.சி., இயக்குனர் குழு தெரிவித்து உள்ளது.கான்பூர், ஐ.ஐ.டி., மற்றும் வார்ட்டன் வர்த்தக கல்வி மைய பட்டதாரியான, சஞ்சய் பூரி, 1986ல், ஐ.டி.சி.,யில் சேர்ந்தார்.
கடந்த, 2001 – -06 வரை, நேபாளத்தில், ‘சூர்யா நேபாள்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக பணியாற்றினார். இந்தியா திரும்பி, ‘ஐ.டி.சி., இன்போடெக்’ நிறுவனத்தில், 2009 வரை, நிர்வாக இயக்குனராக பொறுப்பு வகித்தார்.கடந்த, 2014ல், சிகரெட், அகர்பத்தி, உடனடி உணவு வகைகள் உள்ளிட்ட நுகர்பொருள் பிரிவின் தலைவராக இவர் நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து, 2015ல், காகிதம், பேக்கேஜிங் மற்றும் வேளாண் பொருட்கள் பிரிவின் செயல் இயக்குனராக பொறுப்பேற்றார்.கடந்த, 2016ல், ஐ.டி.சி., தலைமை செயல்பாட்டு அதிகாரியாகவும், 2017ல், தலைமை செயல் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டார். இவர், 2021- – 22ல், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்பார் என, ஐ.டி.சி., ஏற்கனவே அறிவித்திருந்தது. தேவேஷ்வர் மறைவைத் தொடர்ந்து, தற்போது இப்பதவிக்கு வந்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|