ஐ.டி.சி., தலைவரானார் சஞ்சய் பூரிஐ.டி.சி., தலைவரானார் சஞ்சய் பூரி ... தங்கம் விலையில் அதிரடி : சவரன் ரூ.296 அதிகரிப்பு தங்கம் விலையில் அதிரடி : சவரன் ரூ.296 அதிகரிப்பு ...
சில்லரை விலை பணவீக்கம் உயர்வு:காய்கறி உள்ளிட்ட உணவுப் பொருட்கள், ‘விர்ர்...’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மே
2019
01:03

புதுடில்லி:கடந்த ஏப்ரலில், நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், ஆறு மாதங்களில் இல்லாத வகையில், 2.92 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, மார்ச்சில், 2.86 சதவீதமாக இருந்தது.மதிப்பீட்டு மாதத்தில், காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் விலை அதிகரித்திருந்தது.இதனால், சில்லரை பணவீக்கம் உயர்ந்துள்ளது.
அதேசமயம், வீட்டு வசதி பிரிவின் சில்லரை பணவீக்கம், குறைந்துள்ளது. மின்சாரம் மற்றும் எரிபொருள் பிரிவின் சில்லரை பணவீக்கம் அதிகரித்துள்ளது.கடந்த ஏப்ரலில், காய்கறிகள் பிரிவின் சில்லரை பணவீக்கம், 2.87 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, மார்ச்சில், 1.49 சதவீதமாக பின்னடைவைக் கண்டிருந்தது.தானியங்கள்இதே காலத்தில், பருப்பு வகைகளின் சில்லரை பணவீக்கம், 0.89 சதவீதம் பின்னடைவில் இருந்து, மைனஸ், 2.25 சதவீதமாக அதிகரித்துள்ளது.கடந்த ஏப்ரலில், உணவுப் பொருட்களின் சில்லரை பணவீக்கம், 1.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, மார்ச்சில், 0.3 சதவீதமாக குறைந்து இருந்தது.இதே காலத்தில், தானியங்கள் பிரிவின் சில்லரை பணவீக்கம், 1.25 சதவீதத்தில் இருந்து, 1.17 சதவீதமாக சரிவடைந்துள்ளது.
வீட்டு வசதிப் பிரிவின் சில்லரை பணவீக்கம், 4.93 சதவீதத்தில் இருந்து, 4.76 சதவீதமாக குறைந்துள்ளது. எரிபொருள் மற்றும் மின்சாரப் பிரிவுகளின் சில்லரை பணவீக்கம், 2.42 சதவீதத்தில் இருந்து, 2.56 சதவீதமாக அதிகரித்துள்ளது.ஜவுளி மற்றும் காலணி பிரிவின் சில்லரை பணவீக்கம், 2.59 சதவீதத்தில் இருந்து, 2.01 சதவீதமாக குறைந்துள்ளது.ரிசர்வ் வங்கிநடப்பு நிதியாண்டில், சில்லரை பணவீக்க இலக்கு, 4 சதவீதமாக, ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது.
இந்த வகையில், தொடர்ந்து ஒன்பது மாதங்களாக, சில்லரை பணவீக்கம், ரிசர்வ் வங்கி நிர்ணயித்த, 4 சதவீத அளவிற்குள் உள்ளது.ரிசர்வ் வங்கி, சில்லரை விலை பணவீக்கத்தின் அடிப்படையில், அதன் நிதிக் கொள்கையை உருவாக்குகிறது. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூடி, அதன் நிதிக் கொள்கையை அறிவிக்கிறது.சில்லரை விலை பணவீக்க அடிப்படையில், வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான, ‘ரெப்போ’ வட்டி விகிதத்தை, ரிசர்வ் வங்கி நிர்ணயிக்கிறது. அதுபோல, வங்கிகளிடம் இருந்து, ரிசர்வ் வங்கி பெறும், குறுகிய கால கடனுக்கான, ‘ரிவர்ஸ் ரெப்போ’ வட்டி விகிதமும் நிர்ணயிக்கப்படுகிறது.
இந்தாண்டு ஜனவரியில், சில்லரை பணவீக்கம் குறைந்து இருந்ததால், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு, பிப்ரவரியில், ‘ரெப்போ’ வட்டியை, 6.50 சதவீதத்தில் இருந்து, 6.25 சதவீதமாக குறைத்தது.இதைத் தொடர்ந்து, கடந்த மாதம், மீண்டும் ரெப்போ வட்டி, 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு, 6 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஏப்ரலில் சில்லரை பணவீக்கம் அதிகரித்துள்ளதால், ஜூன் மாதம், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு, ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் செய்யாது என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)