பதிவு செய்த நாள்
17 மே2019
04:04
சென்னை: ‘‘சுந்தரம் ஹோண்டா நிறுவனம் துவங்கியதிலிருந்து இதுவரை, ஒரு லட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது,’’ என, சுந்தரம் மோட்டார்ஸ் நிறுவனத்தின் செயல் இயக்குனர், ஷரத் விஜயராகவன் தெரிவித்தார்.
சுந்தரம் மோட்டார்ஸ் நிறுவனத்தின் செயல் இயக்குனர், ஷரத் விஜயராகவன், இணை நிர்வாக இயக்குனர், எஸ்.ராம் இருவரும், சென்னையில் நேற்று அளித்த பேட்டி:சுந்தரம் ஹோண்டா, 1998ம் ஆண்டு துவங்கப்பட்டது. துவங்கிய முதல் மாதத்தில், 930 கார்கள் விற்பனை செய்யப்பட்டன. தற்போது, ஒரு லட்சம் கார்கள் விற்பனை என்ற இலக்கை அடைந்து உள்ளோம். மேலும், தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக இந்திய அளவில், சில்லரை விற்பனையில் முதலிடம் வகிக்கிறோம்.
வாடிக்கையாளர்களுக்கு உலக அளவிலான சேவை, அவர்களின் திருப்தி ஆகியவற்றுக்கு முதலிடம் அளிக்கிறோம். இதுவே, நாங்கள் தொடர்ந்து முதலிடம் வகிப்பதற்கு முக்கிய காரணம்.தொடர்ந்து, நிறுவனத்தின் விரிவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம். தற்போது, 12 விற்பனை மையங்கள் உள்ளன. இந்த எண்ணிக்கையை, 2021க்குள், 17 ஆக உயர்த்த, நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.
இதற்காக, காரைக்குடி போன்ற சிறிய நகரங்களில் முதலீடு செய்ய உள்ளோம். சுந்தரம் ஹோண்டாவின் மொத்த விற்பனை, 840 கோடி ரூபாயாக இருக்கிறது. சுந்தரம் மோட்டார்ஸ் நிறுவனத்தின் கடந்த ஆண்டு விற்பனை, 1,800 கோடி ரூபாய்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|