பதிவு செய்த நாள்
17 மே2019
04:05
புதுடில்லி: எண்ணெய் மற்றும் எரிவாயு வள ஆய்வு உரிம ஏலத்தில், முகேஷ் அம்பானியின், ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ மற்றும் அதன் கூட்டு நிறுவனமான, ‘பிரிட்டிஷ் பெட்ரோலியம்’ முதன் முறையாக இணைந்து பங்கேற்றுள்ளன.
மொத்தம், 32 எண்ணெய் மற்றும் எரிவாயு வள ஆய்வுப் பகுதிகளுக்கான ஏலத்தில், இந்நிறுவனங்கள், கிருஷ்ணா – கோதாவரி படுகையில், ஓர் இடத்திற்கு உரிமம் கோரி விண்ணப்பித்து உள்ளன.பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனம், 2011ல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின், 21 எண்ணெய் மற்றும் எரிவாயு வள ஆய்வுப் பகுதியில், 720 கோடி டாலர் முதலீடு செய்தது.
ஏழு ஆண்டுகள் கழித்து, புதிய இடத்திற்கு உரிமம் கோரி, ரிலையன்சுடன் இணைந்து, தற்போது விண்ணப்பித்துள்ளது. அனில் அகர்வால் தலைமையிலான, வேதாந்தா குழுமம், 30 இடங்களுக்கு உரிமம் கோரி விண்ணப்பித்துள்ளது. பொதுத் துறையைச் சேர்ந்த, ஓ.என்.ஜி.சி., நிறுவனம், 20 இடங்களுக்கு உரிமம் கோரி, ஏலத்தில் பங்கேற்றுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|