எண்ணெய் – எரிவாயு ஏலம்; ரிலையன்ஸ் - பி.பி., பங்கேற்பு எண்ணெய் – எரிவாயு ஏலம்; ரிலையன்ஸ் - பி.பி., பங்கேற்பு ...  தேச விரோத நிறுவனங்களுக்கு மூடுவிழா; புதிய சட்டம் இயற்ற மத்திய அரசு முடிவு தேச விரோத நிறுவனங்களுக்கு மூடுவிழா; புதிய சட்டம் இயற்ற மத்திய அரசு முடிவு ...
இந்தியாவில் சீனப் பொருட்கள் குவியும் அபாயம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மே
2019
04:43

புதுடில்லி: அமெரிக்காவின் வரி உயர்வு நடவடிக்கையால், சீனாவில் இருந்து அதிக அளவில் மலிவு விலை பொருட்கள் குவியும் அபாயம் உள்ளது.

கடந்த வாரம், அமெரிக்கா, 20 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான சீனப் பொருட்களுக்கு, 10 – 25 சதவீதம் வரி உயர்வை அமல்படுத்தியது. அத்துடன், மேலும், 30 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு, வரி உயர்த்தப்படும் எனவும் அறிவித்துள்ளது. இதற்கு பதிலடியாக, அமெரிக்காவின், 6,000 கோடி டாலர் மதிப்புள்ள பொருட்களின் வரியை, சீனா உயர்த்தியுள்ளது.

எச்சரிக்கை:
இந்த பரஸ்பர வர்த்தகப் போரால், சீனாவின் மலிவு விலை பொருட்கள், அதிக அளவில் இந்தியாவில் குவியும் அபாயம் உள்ளதாக, தர நிர்ணய நிறுவனமான, ‘இந்த் – ரா’ எச்சரித்துள்ளது. இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: அமெரிக்காவின் வரி உயர்வை சமாளிக்க, இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில், சீனா ஏற்றுமதியை அதிகரிக்கும். இதனால், இந்தியாவின் உற்பத்தி மற்றும் தேவைப்பாட்டிற்கான இடைவெளி குறையும். உள்நாட்டு வர்த்தகம், குறிப்பாக, மின்னணு சாதனங்கள், இரும்பு, உருக்கு மற்றும் இயற்கை ரசாயனப் பொருட்கள் அதிக அளவில் குவியும்.

கடந்த ஆண்டு, சீனாவில் இருந்து, 54 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான பொருட்களை, அமெரிக்கா இறக்குமதி செய்தது. இது, அமெரிக்காவின் மொத்த இறக்குமதியில், 18 சதவீதம்; மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 2.34 சதவீதம். இந்த அளவிற்கு சீனாவை, அமெரிக்கா சார்ந்துள்ளது. அதனால், வரி உயர்வு காரணமாக, அமெரிக்காவில் பொருட்கள் விலை உயரும். இது, அந்நாட்டின் பணவீக்க உயர்வுக்கு வழி வகுக்கும். அமெரிக்க முதலீட்டாளர்களின் அன்னிய முதலீடுகள் குறையும். இதுவும், இந்தியாவிற்கு சாதகமற்ற அம்சம் தான்.

அதுபோல, சீனா, அதன் யுவான் கரன்சி மதிப்பை குறைத்தால், அது, அன்னியச் செலாவணிக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு குறைய வழி வகுக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)