பதிவு செய்த நாள்
30 மே2019
06:21
சென்னை: உலகின் உயரமான சிலையாக, சர்தார் வல்லபபாய் படேலின், ‘ஒருமைப்பாட்டு சிலை’யை வடிவமைத்து நிறுவியதன் வாயிலாக, ‘வேர்ல்டு ஆர்க்கிடெக்சர் நியூஸ்’ விருது, எல் அண்டு டி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து, எல் அண்டு டி வெளியிட்ட செய்திக் குறிப்பு:எல் அண்டு டி நிறுவனம், இந்தியாவில் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக திகழ்கிறது. 33 மாதங்களில், உலகின் மிக உயரமான சிலையாக, ஒருமைப்பாட்டு சிலையை வடிவமைத்து நிறுவியுள்ளது. இதற்கு, உலகின் கவுரவமிக்க, சர்வதேச அளவில் போற்றப்படும், வேர்ல்ட் ஆர்க்கிடெக்சர் நியூஸ் விருது கிடைத்து உள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், என்.சுப்பிரமணியன் கூறியுள்ளதாவது:இதுவரை நாங்கள் மேற்கொண்ட பணிகளில் மிகவும் சிக்கலான, பெரும் சவாலான பணிகளில் ஒன்றாக இருந்தது,ஒருமைப்பாட்டு சிலை, பல பொறியியல் நுட்ப வியூகங்களுடன் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|