ஒருமைப்பாட்டு சிலைக்காக  விருது பெற்றது எல் அண்டு டி ஒருமைப்பாட்டு சிலைக்காக விருது பெற்றது எல் அண்டு டி ... டாலர் கண்காணிப்பில் இந்தியா நீக்கம் டாலர் கண்காணிப்பில் இந்தியா நீக்கம் ...
ரிசர்வ் வங்கி, ‘ரெப்போ’ மீண்டும் குறையும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மே
2019
06:25

புதுடில்லி : ‘வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடனுக்கான, ‘ரெப்போ’ வட்டியை, ரிசர்வ் வங்கி மீண்டும் குறைக்கும்’ என, ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு, இந்தாண்டு, இரு முறை கூடியது. அப்போது, ரெப்போ வட்டி, தலா, 0.25 சதவீதம் என, இரு முறை குறைக்கப்பட்டது.தற்போது, ரிசர்வ் வங்கியிடம் இருந்து, வங்கிகள் பெறும் குறுகிய கால கடனுக்கான வட்டி, 6 சதவீதமாக உள்ளது. இந்நிலையில், ஜூன், 3, 4 மற்றும் 6ல் நடைபெறும், ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை குழு கூட்டத்தில், ரெப்போ வட்டி, மேலும் குறைக்கப்படும் என, அமெரிக்காவைச் சேர்ந்த, வர்த்தக ஆய்வு நிறுவனமான, டி அண்டு பி., தெரிவித்துள்ளது.


இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:அமெரிக்காவின் வரி உயர்வால், உலகளவில் வர்த்தகப் பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் தாக்கம், இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் எதிரொலிக்கும்.இந்தியாவில், பருவ மழை பொழிவு, உணவுப் பொருட்கள், கச்சா எண்ணெய் ஆகியவற்றின் விலையேற்றத்தால், பணவீக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால், கொள்கை முடிவெடுப்பதில், ரிசர்வ் வங்கி பொறுத்திருந்து பார்க்கலாம் எனக் கருதுகிறது.ஆனால், தொழில் துறையின் மந்தமான போக்கும், ஸ்திரமற்ற வர்த்தகச் சூழலும், மீண்டும் முதலீடு பெருகுவதை தாமதப்படுத்தும் என்பதால், ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டியை குறைக்கும் எனத் தெரிகிறது.


ஜி.எஸ்.டி., மற்றும் பண மதிப்பிழப்பின் தாக்கம் மறைந்து, பல துறைகள் தற்போது தான், மெதுவான முன்னேற்றத்தை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளன. எனினும், முதலீடு களில் சுணக்கமும், தேவைப்பாடு குறைந்துள்ளதும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்து உள்ளதை காட்டுகின்றன.இந்தாண்டு மார்ச்சை விட, ஏப்ரலில், தொழில் துறை உற்பத்தி சற்று அதிகரித்திருக்கக் கூடும். அதன் அடிப்படையில், இத்துறை, 2 – 3 சதவீத வளர்ச்சி கண்டிருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


இத்தகைய சூழலில், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு, அடுத்த மாதம், மூன்றாவது முறையாக, ரெப்போ வட்டியை குறைக்கக் கூடும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)