பதிவு செய்த நாள்
04 ஜூன்2019
00:17
போலி பில்கள் வாயிலாக, சென்னையில், ஓராண்டில், 426 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என, ஜி.எஸ்.டி., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, ஜி.எஸ்.டி., அதிகாரிகள் கூறியதாவது:ஜி.எஸ்.டி., எனும், சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் அமலுக்கு பின், போலி பில்கள் வாயிலாக, சலுகைகள் பெறுவது அதிகரித்து வருகிறது. போலி பில் தயாரிப்பதற்காக, ஜி.எஸ்.டி., பதிவு எண் பெற்று, போலி நிறுவனங்கள் துவங்கப்படுகின்றன. இவற்றை தடுக்கும் விதமாக, கடந்த ஆண்டில் சென்னையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
கடந்த, 2018 – 19ம் நிதியாண்டில் மட்டும், போலி பில்கள் தயாரித்த ஆறு பேர், சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர். 426 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு, சென்னையில் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மொத்தம், 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றின் மீதான விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. போலி பில்கள் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர்கள் கூறினர்.– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|