பதிவு செய்த நாள்
06 ஜூன்2019
15:58
மும்பை : ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்ததன் எதிரொலியாக பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. சென்செக்ஸ் 554 புள்ளிகளும், நிப்டி 178 புள்ளிகளும் வீழ்ச்சி அடைந்தன.
ரிசர்வ் வங்கியின் நிதிநிலை ஆய்வுக்கூட்டம் கடந்த மூன்று தினங்களாக நடந்தது. இந்த கூட்டத்தில், குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6 சதவீதத்திலிருந்து 5.75 சதவீதமாக குறைக்கப்பட்டது. நடப்பாண்டில் மூன்றாவது முறையாக ரெப்போ வட்டி குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வீடுகளுக்கான கடன் வட்டி வகிதம் குறைய உள்ளது. இதன் தாக்கம் பங்குச்சந்தைகளில் எதிரொலித்தது. குறிப்பாக வங்கி தொடர்பான பங்குகள் கடும் சரிவை சந்தித்தன.
காலையில் வர்த்தகம் துவங்கும்போதே பங்குச்சந்தைகள் சரிந்த நிலையில் ரிசர்வ் வங்கி அறிவிப்புக்கு பின்னர் கடுமையாக சரிய தொடங்கின. வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 553.82 புள்ளிகள் சரிந்து 39,529.72ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 177.90 புள்ளிகள் சரிந்து 11,843.75ஆகவும் நிறைவடைந்தன. 2019ம் ஆண்டில் வர்த்தகநேர முடிவில் சரிந்த மிகப்பெரிய சரிவு இதுவாகும்.
இன்றைய வர்த்தகத்தில் வங்கி தொடர்பான அனைத்து நிறுவன பங்குகள், குறிப்பாக பொதுத்துறை நிறுவன பங்குகள் அனைத்தும் கடுமையாக 5 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|