பதிவு செய்த நாள்
28 ஜூன்2019
06:22
புதுடில்லி: இந்தியாவில், ‘பிட்காய்ன்’ உள்ளிட்ட, மெய்நிகர் நாணயங்களுக்கான, முன்னணி சந்தைகளில் ஒன்றான, காய்னெக்ஸ், தன் சேவையை, நேற்று மதியம், 2:00 மணி முதல் நிறுத்திவிட்டது.
காய்னெக்ஸ் நிறுவனம், 2017 ஆகஸ்டில் துவங்கப்பட்டது. மெய்நிகர் நாணயங்களை, இந்திய அரசு ஆதரிக்காத நிலையில், மேற்கொண்டு செயல்படுவதில் எந்த பலனும் இல்லை எனக் கருதி, இந்நிறுவனம் தன் சேவையை நிறுத்திவிட்டது.
கடந்த, 14 மாதங்களாகவே சிரமத்தை எதிர்கொண்டு வருவதாகவும், இந்தியாவில் நிச்சயமற்ற தன்மை மற்றும் இடையூறுகளால், இம்முடிவுக்கு வந்துள்ளதாகவும், இந்நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி இருந்த மின் அஞ்சலில் தெரிவித்துள்ளது. மேலும், ‘எதிர்பார்த்ததற்கும் முன்னதாகவே விடைபெறுகிறது காய்னெக்ஸ்’ எனவும் குறிப்பிட்டிருந்தது.
வாடிக்கையாளர்கள், டிஜிட்டல் சொத்துக்களை, ஜூலை 15ம் தேதிக்குள் திரும்ப பெற்றுக் கொள்ளும்படி, இந்நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|