பதிவு செய்த நாள்
28 ஜூன்2019
06:25
புதுடில்லி: பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களுக்கு, அவற்றில் உள்ள அதிக கொழுப்பு, சர்க்கரை, உப்பு ஆகியவற்றை எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில், ‘லேபிள்’களை ஒட்டுவது குறித்து, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் திட்டமிட்டு வருகிறது.
இது குறித்து, ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வரைவு விதிமுறைகளின் படி, உணவு தயாரிப்பு நிறுவனங்கள், பாக்கெட்டுகளின் முன்பக்கத்தில், அதிக கொழுப்பு, சர்க்கரை, உப்பு ஆகியவற்றின் உள்ளடக்க அளவை, சிவப்பு நிற லேபிளுடன் தெரிவிக்க வேண்டியதிருக்கும்.
தற்போது, உணவுப் பொருட்களின் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, வெவ்வேறு இடங்களில் குறிப்பிடப்படுகின்றன. புதிய வரைவு திட்டத்தின் படி, இரண்டு தேதிகளையும் ஒரே இடத்தில் குறிப்பிட வேண்டும்.அசைவ உணவு, சைவ உணவு இவற்றை வேறுபடுத்திக் காட்டும் அம்சங்களும் வரைவு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|