இ.டி.எப்., திட்டங்களில் ஈர்ப்பு அதிகமாகும் இ.டி.எப்., திட்டங்களில் ஈர்ப்பு அதிகமாகும் ...  பட்ஜெட்டின் பன்முகத் தன்மை பட்ஜெட்டின் பன்முகத் தன்மை ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச் சந்தை:கவனிக்க வேண்டிய பங்குகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2019
00:17

இந்­திய பங்­குச் சந்­தை­கள், இம்­மாத ஆரம்­பத்­தில் உயர்ந்து வர்த்­த­க­மாகி, வர­லாற்று உச்­சத்தை எட்­டி­யது குறிப்­பி­டத்­தக்­கது. தேசிய பங்­குச் சந்தை குறி­யீட்டு எண், நிப்டி, 12 ஆயி­ரம் புள்­ளி­க­ளைத் தாண்டி, 12,102 என்ற உயர்வை எட்டி இருந்­தது. மும்பை பங்­குச் சந்தை குறி­யீட்டு எண், சென்­செக்ஸ், 40 ஆயி­ரம் புள்­ளி­க­ளைத் தாண்டி, வர­லாற்று உச்­சத்தை எட்­டி­யி­ருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.




கடந்த வாரத்­தைப் பொறுத்­த­வரை, வார ஆரம்ப நாட்­களில், சற்று அதி­க­ரித்து, வர்த்­த­கம் ஆனது. வார இறுதி நாளான வெள்­ளி­யன்று, புதிய மத்­திய அர­சின், முழு பட்­ஜெட் தாக்­கல் செய்­யப்­பட்­டது. பட்­ஜெட் உரை துவங்­கிய முதலே, பங்­குச் சந்­தை­கள் சரிய ஆரம்­பித்­தன.
பட்­ஜெட் அறி­விப்­பில் வெளி­யான சில சீர்­தி­ருத்த முறை­க­ளால் சரிவு ஏற்­பட்­டது.





குறிப்­பாக, வெளி­நாட்டு முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு கொண்டு வரப்­பட்ட கட்­டுப்­பா­டு­கள், நிறு­வன பங்­கு­களில், குறைந்­த­பட்­சம், 35 சத­வீ­தம் பொது­மக்­க­ளி­டம் இருக்க வேண்­டும் என்ற கட்­டுப்­பாடு, எதிர்­பார்த்த துறை­களில் பெரிய அறி­விப்­பு­கள் வெளி­யா­கா­தது ஆகி­ய­வற்­றால், முத­லீட்­டா­ளர்­கள் மத்­தி­யில் நம்­பிக்­கையை பெற முடி­யா­மல், பங்­குச்சந்­தை­கள் சரிந்­தன.



பொதுத் துறை வங்கி நிறு­வன பங்­கு­கள், விலை உயர்ந்­தி­ருந்த போதி­லும், அவை மீண்­டும் சரிந்து வர்த்­த­கம் ஆகின. யெஸ் பேங்க், என்.டி.எப்.சி., வேதாந்தா, மகிந்­திரா அண்டு மகிந்­திரா, சன் பார்மா போன்ற நிறு­வன பங்­கு­கள் கடு­மை­யான சரிவை சந்­தித்­தன.அமெ­ரிக்­கா­வில், புதி­தாக பணி­யில் அமர்த்­தப்­ப­டு­வோர் எண்­ணிக்கை, கடந்த மே மாதத்தை விட, ஜூன் மாதத்­தில் அதி­க­ரித்து இருந்­தது. இத­னால், அமெ­ரிக்க நாணய குறி­யீடு உயர்ந்து, பங்­குச் சந்­தை­கள் உயர வழி­வ­குத்­தது.



பொதுத்­துறை நிறு­வ­னங்­க­ளுக்கு, மூல­தன முத­லீடாக, மத்­திய அரசு, 70 ஆயி­ரம் கோடி ரூபாய் அறி­வித்­துள்­ளது. தங்­கம் மீதான இறக்­கு­மதி வரி விதிப்பை அதி­க­ரித்­த­தன் கார­ண­மாக, நாட்­டின் இறக்­கு­மதி சுமை குறைந்து, நடப்பு கணக்கு பற்­றாக்­குறை நிர்­ண­யித்த அள­வில் கட்­டுப்­ப­டுத்­தப்­படும் என்ற அறி­விப்­பும் வெளி­யா­னது.இதன் கார­ண­மாக, இத்­துறை சார்ந்த பங்­கு­களின் விலை­யில், 4 முதல், 12 சத­வீ­தம் சரிவு ஏற்­பட்­டது.



இந்த ஆண்­டின் ஜன­வரி முதல், ஜூன் வரை­யி­லான கால கட்­டத்­தில், பய­ணி­யர் மற்­றும் கன­ரக வாக­னங்­கள் விற்­பனை கடு­மை­யாக சரிந்­துள்­ளது. இத­னால் முன்­னணி நிறு­வ­னங்­கள், தங்­க­ளது உற்­பத்­தியை, கடந்த இரு மாதங்­க­ளாக குறைத்­துக் கொண்­டுள்ளன. மேலும், விற்­பனை செய்­யப்­ப­டாத அதிக அள­வி­லான இருப்­பு­கள் உள்­ள­தால், இத்­துறை சார்ந்த பங்­கு­கள் எந்த ஒரு வளர்ச்­சி­யும் பெறாத நிலை­யில், தற்­போது வர்த்­த­க­மாகி வரு­கின்றன.இந்த வாரம் நிப்­டியை பொறுத்­த­வரை, அதன் சப்­போர்ட், 11755 மற்­றும் 11680; ரெசிஸ்­டென்ஸ்,
11845, 11900.

முருகேஷ் குமார்

murukesh.kumar@choiceindia.com

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)