‘ஒரே நாடு, ஒரே மணல்’ ‘ஒரே நாடு, ஒரே மணல்’ ...  உற்பத்தி குறைப்பில் மாருதி சுசூகி உற்பத்தி குறைப்பில் மாருதி சுசூகி ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச்சந்தை கடும் சரிவு - ரூ.5 லட்சம் கோடி இழப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2019
17:04

மும்பை : பட்ஜெட் தாக்கம் இன்றைய வர்த்தகவாரத்தின் முதல்நாள் பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது. இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 793 புள்ளிகளும், நிப்டி 253 புள்ளிகளும் சரிவை சந்தித்தன.

மத்திய பட்ஜெட் கடந்த வெள்ளியன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இருந்தாலும், ஒரு சில அறிவிப்புகள் சிலருக்கு அதிருப்தியை தந்துள்ளது. குறிப்பாக உயர் பணக்காரர்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டு இருப்பது, பொதுத்துறை நிறுவன பங்குகள் 35 சதவீதமாக உயர்த்தப்பட்டு இருப்பது, தங்கம் மீதான இறக்குமதி வரி மற்றும் பெட்ரோல் - டீசலுக்கான வரி அதிகரிப்பு போன்ற காரணங்கள் பங்குச்சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன.

கடந்த வெள்ளியன்றே பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்த நிலையில் இன்றைய வர்த்தகவாரத்தின் முதல்நாளில் பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடங்கின. தொடர்ந்து மேற்சொன்ன காரணங்கள் பங்குச்சந்தைகளில் எதிரொலித்ததால் முதலீட்டாளர்கள் அது தொடர்பான பங்குகளை அதிகளவில் விற்பனை செய்தன. இதனால் இன்றைய வர்த்தகம் சரிவை சந்தித்தன. மேலும், ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சரிவும் இந்திய பங்குச்சந்தைகள் இன்று(ஜூலை 8) சரிய முக்கியமா காரணமாக அமைந்தன. ஒருகட்டத்தில் சென்செக்ஸ் 903 புள்ளிகள் அளவுக்கு சரிந்தன. இறுதியில் வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 792.72 புள்ளிகள் சரிந்து 38,720.57ஆகவும், நிப்டி 252.55 புள்ளிகள் சரிந்து 11,558.60ஆகவும் முடிந்தன.

இன்றைய வர்த்தகத்தில் பஜாஜ் பைனான்ஸ், ஓஎன்ஜிசி., என்டிபிசி, ஹீரோ மோட்டோ கார்ப், மாருதி போன்ற நிறுவன பங்குகள் அதிக சரிவை சந்தித்தன. இவைகள் தவிர்த்து யெஸ் வங்கி, ஹெச்சிஎல் டெக்., டிசிஎஸ்., போன்ற நிறுவன பங்குகளும் சரிவை சந்தித்தன.

ரூ.5 லட்சம் கோடி இழப்பு
பட்ஜெட்டிற்கு முதல்நாள் அதாவது, ஜூலை 4ம் தேதி, மும்பை பங்குச்சந்தைகளில் 153.58 லட்சம் கோடியாக இருந்த முதலீடு, ஜூலை 8ம் தேதி ரூ.148.08 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. இதன் மூலம் சந்தை முதலீட்டாளர்களுக்கு ரூ.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)