தமிழகத்தில் ஓராண்டில் ரூ.5 கோடி, ‘இ – வே’ பில் பதிவு தமிழகத்தில் ஓராண்டில் ரூ.5 கோடி, ‘இ – வே’ பில் பதிவு ... உலக முதலீட்டாளர் மாநாடு 2021ல் நடக்கிறது உலக முதலீட்டாளர் மாநாடு 2021ல் நடக்கிறது ...
சில்லரை விலை பணவீக்கம் ஜூன் மாதத்தில் அதிகரிப்பு:உணவு பொருட்கள் விலை உயர்வால் பாதிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2019
23:32

புதுடில்லி:ஜூன் மாதத்தில், நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், 3.18 சதவீதமாக அதிகரித்துள்ளது. உணவு விலை அதிகரித்ததன் காரணமாக, கடந்த மே மாதத்தை விட, சில்லரை விலை பணவீக்கம் சிறிதளவு அதிகரித்துள்ளது. குறிப்பாக, மதிப்பீட்டு மாதத்தில், இறைச்சி, முட்டை உள்ளிட்ட உணவுப் பொருட்கள் விலை அதிகரித்திருந்தது.




மே மாதத்தில், சில்லரை பணவீக்கம், 3.05 சதவீதமாக இருந்தது. இதுவே, கடந்த ஏப்ரலில், அதற்கு முந்தைய ஆறு மாதங்களில் இல்லாத வகையில், 2.92 சதவீதமாக அதிகரித்து இருந்தது.மார்ச் மாதத்தில், இது, 2.86 சதவீதமாக இருந்தது.இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்தே, தொடர்ந்து, சில்லரை விலை பணவீக்கம் அதிகரித்து வருகிறது.



இதுகுறித்து, மத்திய புள்ளியியல் அலுவலகம், மேலும் தெரிவித்துள்ளதாவது:உணவு பணவீக்கம் மதிப்பீட்டு மாதத்தில், அதற்கு முந்தைய மாதமான, மே மாதத்தில் இருந்ததை விட, 1.83 சதவீதம் அளவுக்கு அதிகரித்து, 2.17 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதுவே, ஜூன் மாத சில்லரை விலை பணவீக்க அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.




புரதச் சத்து அதிகம் கொண்ட உணவுகளான, முட்டை, இறைச்சி, மீன் உள்ளிட்டவற்றின் விலை, மே மாதத்தை விட ஜூன் மாதத்தில் அதிகரித்திருந்தது.இறைச்சி, முட்டை உள்ளிட்டவற்றின் விலை அதிகரித்திருந்தாலும், பழங்கள் மற்றும் காய்கறிகள் விலை அந்த அளவுக்கு அதிகரிக்கவில்லை.சில்லரை விலை பணவீக்கத்தின் அடிப்படையில் தான், ரிசர்வ் வங்கி, அதன் நிதிக் கொள்கையை உருவாக்குகிறது. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூடி, அதன் நிதிக் கொள்கையை அறிவிக்கிறது.




சில்லரை விலை பணவீக்க அடிப்படையில், வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான, ‘ரெப்போ’ வட்டி விகிதத்தை, ரிசர்வ் வங்கி நிர்ணயிக்கிறது.அதுபோல, வங்கிகளிடம் இருந்து, ரிசர்வ் வங்கி பெறும், குறுகிய கால கடனுக்கான, ‘ரிவர்ஸ் ரெப்போ’ வட்டி விகிதமும் நிர்ணயிக்கப்படுகிறது.



தொழில் துறை உற்பத்தி சரிவு




நாட்டின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, மே மாதத்தில், 3.1 சதவீதமாக, சரிவை சந்தித்துள்ளது. இந்த சரிவுக்கு, சுரங்க துறை மற்றும் தயாரிப்பு துறையில் ஏற்பட்ட மந்த நிலையே காரணம்.தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஆண்டு, மே மாதத்தில், 3.8 சதவீதமாக இருந்தது. நடப்பாண்டு, ஏப்ரலில், 4.3 சதவீதமாக இருந்தது.சுரங்க துறையில், மே மாதத்தில், தொழில் துறை உற்பத்தி, 3.2 சதவீதமாக உள்ளது.




இது, கடந்த, மே மாதத்தில், 5.8 சதவீதமாக அதிகரித்திருந்தது.இதேபோல், தயாரிப்பு துறையில், கடந்த ஆண்டு, மே மாதம், 3.6 சதவீதமாக இருந்த நிலையில், நடப்பாண்டு, மே மாதத்தில், 2.5 சதவீதமாக பின்னடைவை சந்தித்துள்ளது.இருப்பினும், மின்சார உற்பத்தி, 7.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு, மே மாதத்தில், இது, 4.2 சதவீதமாக குறைந்து இருந்தது.ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட, 23 தொழில் துறைகளில், 13 துறைகளின் உற்பத்தி அதிகரித்துள்ளது என, மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)