பதிவு செய்த நாள்
13 ஜூலை2019
23:32
சென்னை:தமிழக அரசு சார்பில், மூன்றாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை, வரும், 2021ல் நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை, தொழில் வழிகாட்டி நிறுவனம் துவங்க உள்ளது.
இது குறித்து, தமிழக அரசின் தொழில் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டு
உள்ளதாவது:
வரும், 2021ல், மூன்றாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துவதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை, தொழில் வழிகாட்டி நிறுவனம், நடப்பாண்டில் துவங்க உள்ளது.
மேலும், தற்போதைய ஒற்றைச்சாளர இணையதளம் மேம்படுத்தப்பட்டு, ஏற்கனவே உள்ள, 24 சேவைகளுடன், 30 புதிய சேவைகள் சேர்த்து, 54 சேவைகளாக வழங்க, புதிய ஒற்றைச்சாளர இணையதளம் உருவாக்கப்பட உள்ளது.
முதலீடு மேம்பாடு, திட்ட மேலாண்மை போன்ற துறைகளில், திறமை வாய்ந்த
பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, தொழில் வழிகாட்டி நிறுவனம் பலப்படுத்தப்படும்.
மேலும், தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கு, புதிய அலுவலக வசதி ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு, 2015ல் நடைபெற்றது. இரண்டாவது
மாநாடு, 2019ல் நடைபெற்றது. முதலாவது மாநாட்டின் மூலம், 2 லட்சத்து, 42 ஆயிரத்து, 160 கோடி ரூபாய் முதலீடும்; இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம், 3 லட்சத்து, 451 கோடி ரூபாய் முதலீடும் திரட்டப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|